tamilnadu

img

தருமபுரி: மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு!

தருமபுரி அருகே பாலக்கோட்டில், விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன. 
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில், நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி 5 காட்டு யானைகள் வந்தது. அப்போது, 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானைகளும், ஒரு ஆண் யானை என 3 காட்டு யானைகள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்க சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. யானைக் கூட்டத்தில் உயிர் தப்பிய  இரண்டு குட்டி யானைகள் உயிரிழந்த யானைகளின் சடலத்தை சில முறை சுற்றி வந்தது பார்ப்பவர்களை கலங்க வைத்தது.
இந்த விவகாரத்தில் பாலக்கோடு வனத்துறையினர் அனுமதியின்றி மின்வேலி அமைத்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.