சென்னை, ஆக. 8- அமைச்சர் பதவியிலிருந்து மணிகண் டனை நீக்கியது முதலமைச்சரின் அதிகாரத் திற்குட்பட்ட முடிவு என அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் புத னன்று (ஆக. 7) இரவு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலை யில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் அவரது இல்லத்தில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மணிகண்டனை பதவியி லிருந்து நீக்கியது முதலமைச்சரின் அதி காரத்திற்குட்பட்ட முடிவு என்றும் நீக்கத் திற்கான காரணம் தனக்கு தெரியாது என வும் அமைச்சர் கூறினார்.