மார்க்சிஸ்ட் கட்சி - சிஐடியு வாழ்த்து
சென்னை, ஜூன் 30- 90 வயதை பூர்த்திசெய்யும் டிஆர்இயு மூத்த தலைவர் பி.வி. ராமதாசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியுவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனில் (டிஆர்.இ.யு) பொதுச் செயலாளராகவும், சிஐடியுவின் தமிழ்மாநிலக் குழு துணைத் தலைவராகவும் நீண்ட காலம் பணி யாற்றிய தோழர் பி.வி. ராமதாஸ் அவர்கள் ஜூலை 1 அன்று 90 வயதை பூர்த்தி செய்கிறார்.
1951-ல் ரயில்வேயில் பணியாற்ற துவங்கிய ராம தாஸ் அன்றைய சதர்ன் ரயில்வே லேபர் யூனியனில் உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றத் துவங்கினார். இந்த சங்கம் தான் பின்னர் டி.ஆர்.இ.யு.வாக மாறியது. தோழர் கே. அனந்தநம்பியார் உள்பட தலைவர்களுடன் இணைந்து டி.ஆர்.இ.யு.வின் உதவிப் பொதுச் செயலா ளர், பொதுச் செயலாளர் மற்றும் தலைவர், துணைத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்தார். 18 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக பணியாற்றினார். சிஐடியு வின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் மாநில துணைத் தலைவர் பொறுப்புகளில் திறம்பட பணி யாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினராக 12 ஆண்டு காலம் பணியாற் றிய தோழர் ராமதாஸ் 2012-ல் நாகப்பட்டினத்தில் நடை பெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் இதர மூத்த தோழர் களுடன் பாராட்டப்பட்டார். கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சால்வை அணிவித்து அப் போது தோழர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு வரையிலுமாக 55 ஆண்டு காலம் அரசியல், தொழிற்சங்கப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடு பட்ட வந்த ராமதாஸ் கடந்த ஐந்தாண்டு காலமாக கேரளா வில் வசித்து வருகிறார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, சிஐடியுவின் தமிழ் மாநிலக்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.
தலைவர்கள் வாழ்த்து
தோழர் பி.வி.ராமதாஸ் 90 வயதை எட்டுவதை யொட்டி அவருக்கு, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் ஏ.கே. பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.