சென்னை, மார்ச் 17 - தமிழ்நாடு பணியாளர் தேர்வாணை யத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் பதவி விலக வேண்டும் என்று திமுக உறுப்பி னர் அனிதாராதாகிருஷ்ணன் வலியு றுத்தினார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச் 17) கால்நடை, மீன்வளம் மற்றும் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை ஆகிய துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் சுருக்கம் வருமாறு:
அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக):
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, குலசேகரப்பட்டி னத்தில் இஸ்ரோ செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க வேண்டும். மீன் வளத்துறை அமைச்சர் தென்மாவட்டங் களில் உள்ள ஒவ்வொரு கடற்கரை பகுதியாக சென்று மீனவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் மீன வர்களுக்கு வழங்கும் நிவாரணத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் வழங்குவதுபோல், இயற்கைசீற்ற காலங்களிலும் மீன்வர்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணை யத்தில் (டிஎன்பிஎஸ்சி) நடைபெற் றுள்ள முறைகேடு சிந்துபாத் கதை போன்று நீடிக்கிறது. இந்த முறை கேட்டிற்கு பொறுப்பேற்று முதல மைச்சரும், துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்.
அமைச்சர் எம்.சி.சம்பத்: தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எண்ணெய் சுத்திக ரிப்பு நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2 மாதத்தில் ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கும். இதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். முதலமைச்சர்: இஸ்ரோ தலை வர் தலைமை செயலகத்தில் இது தொடர்பாக என்னை சந்தித்து பேசி யுள்ளார். குலசேகரப்பட்டினத்தில் செயற்கைகோள் ஏவுதளம் அமைய உள்ளது. தேர்வாணை தேர்வில் தவறு செய்தவர்களை இந்த ஆட்சியில்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 50 பேரை சிபிசி ஐடி கைது செய்துள்ளது. வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. கடந்த ஆட்சி யில் தவறு செய்தவர்களின் பட்டியல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் ராஜேஷ்குமார் (காங்): ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழர் களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியி னர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்: கொரோனா வைரஸ் ஈரான் நாட்டி லும் பரவி உள்ளதால் விமானச் சேவை முற்றிலுமாக அங்கு நிறுத் தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.