tamilnadu

img

ஏழைகளுக்கு உதவி செய்ய தடையில்லை: தமிழக அரசு

சென்னை, ஏப்.13- தமிழக அரசு திங்களன்று (ஏப்.13) வெளியிட்டுள்ள அறிக் கையில், புயல், வெள்ளம், வறட்சி  போன்ற பேரிடர் காலங்களில் உத வுவது போல தற்போது உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நோய்த் தொற்று தான் அதிகமா கும் என்று சுகாதார வல்லுநர்கள்  தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றி லிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், அதே சமயம் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கவும், முறையான அணுகு முறையை கடைபிடிக்க வேண் டும் எனவும் தெரிவித்துள்ளது.  அரசு  ஞாயிறன்று ஏப்.12  வெளியிட்ட அறிவிப்பில் குறிப்  பிடப்பட்ட அம்சங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன  என்றும், சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத் தான் அரசு  கேட்டுக் கொண்டுள்ளதே தவிர,  யாருக்கும் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி போன்ற தலை வர்கள், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை  விதித்து விட்டது போல் உண் மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு அமைப்பு நிவார ணம் வழங்கினாலும், அதை முறை யாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ, மாநக ராட்சிகளில் மாநகராட்சி ஆணை யரிடமோ, மண்டல அலுவலர்க ளிடமோ, நகராட்சியாக இருந்  தால் அந்தந்த நகராட்சி ஆணைய  ரிடமோ, பேரூராட்சியாக இருந் தால், செயல் அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமாக இருந்தால்,  வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ  வழங்கலாம்.

மேலும், இத்தகைய உதவி களை செய்ய சம்பந்தப்பட்ட வரு வாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். இதை விநியோகப்பதற் கென அரசால் நியமிக்கப்பட்ட  அலுவலர்கள் மூலம் தேவை யான அனைவருக்கும் சென்ற டையும் வகையிலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளி கைப் பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிக ளுக்கு, அல்லது குறிப்பிடும் நபர்க ளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணியில் தன்னார்வலர் களும் மாவட்ட ஆட்சியர்களின்  அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடு படலாம் என தமிழக அரசின்  அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.