சென்னை, மே 31-நடப்பு ஆண்டில் தென் மேற்கு பருவமழை இயல்பு அளவுக்கு பெய்யுமென இந்தியவானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ளசெய்தி குறிப்பில், நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்குமென கூறப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 96 சதவிகித அளவுக்குமழைப் பொழிவு இருக்கும் என்றும், வடமேற்கு இந்தியாவில் 94 சதவிகித அளவிற்கும்,மத்திய இந்தியாவில் 100 சதவிகித அளவிற்கும், தென்னிந்தியாவில் 97 சதவிகித அளவிற்கும், ,வட கிழக்கு இந்தியாவில் 91ரூஅளவிற்கும் மழைப் பொழிவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக 99ரூ மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.