பேரணாம்பேட், ஏப். 11- கிருஷ்ணகிரியில் சத்தியம் தொலைக்காட்சி.நிருபர் பாஸ்கர் தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடி யாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி. மற்றும் பத்திரிகையாளர்க ளுக்கு டி.யூ.ஜே. நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி முன்னாள் அமைச்சரும் மாநிலங் களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரணாம்பேட், ஏப். 11- கிருஷ்ணகிரியில் சத்தியம் தொலைக்காட்சி.நிருபர் பாஸ்கர் தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடி யாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி. மற்றும் பத்திரிகையாளர்க ளுக்கு டி.யூ.ஜே. நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி முன்னாள் அமைச்சரும் மாநிலங் களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபா கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்கா தர் ஆகியோரை செல்பேசியில் தொடர்பு கொண்டு, சம்மந்தப்பட்ட எஸ்எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இருவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி.குமார், ஆய்வா ளர் பாஸ்கர் ஆகியோர் கிருஷ்ணகிரி பிரஸ் கிளப் தலைவர் ரமேஷ், பத்திரிகையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பாஸ்கர் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஓசூர்- கர்நாடக எல்லை பாதுகாப்புப் பணிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இப்பிரச்சனையில் உடனடி யாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர் , காவல் கண்கா ணிப்பாளர் மற்றும் கிருஷ்ணகிரி பத்திரிகையாளர்க ளுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பி.எஸ்.டி. புருஷோத்தமன் தெரி வித்திருக்கிறார்.