tamilnadu

img

பட்டினிச் சாவை தடுத்திடுக: அரசுக்கு கால் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை

சென்னை, மே 22- கொரோனா வைரஸ் பரவல் பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வீட்டில் முடக்கிக் கிடக்கும் கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு 10  ஆயிரம் ரூபாய் நிவாரணம்  வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். டூரிஸ்ட் டாக்சி (கால் டாக்சி) வாகனங்களை பாதுகாப்போடு  இயக்க அனுமதிக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்  பில் சென்னை கிண்டி தொழிற்  பேட்டை அருகே வெள்ளியன்று (மே 22) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சாலை போக்கு வரத்து சம்மேளன பொருளாளர் வி.குப்புசாமி, மாநில துணைச் செயலாளர் கே.பி.அன்பழகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன், கால்டாக்சி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பூபதி,  உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்  சங்கத்தின் தலைவர் சுரேந்தர், அனைத்து ஓட்டுநர் வாழ்வுரிமை தொழிற் சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், தோழர்கள் கார்  ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்  சங்கத்தின் தலைவர் ராமானு ஜம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழு வதும் பொது முடக்கம் அறி விக்கப்பட்டு, வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள் ளது. இதனால் கால்டாக்சி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக  வருமானம் இன்றி வாழ்வா தாரத்தை இழந்து அவதிப்படு கின்றனர். இதுகுறித்து அரசுக்கு பல  முறை மனு அளித்தும் இது வரைக்கும் நிவாரணம் வழங்க  எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. எனவே வேறு  வழியின்றி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடு பட்டதாக தலைவர்கள் தெரி வித்தனர்.

கால் டாக்ஸி அனைத்து ஓட்டு நர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வாகன கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து, தவணை தொகையை செலுத்த வேண்டியதை 6 மாதகாலம் தள்ளி வைக்க வேண்டும் என்  றும் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர். இனியும் வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்  பட்டால் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வருமா னம் இல்லாமல் நோயில் இறப்ப வர்களின் எண்ணிக்கையை விட  பட்டினிச் சாவுகள் அதிமாகும். எனவே வாகனக்களை பாது காப்பாக இயக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின்போது அர சுக்கு கோரிக்கை விடுத்தனர்.