மருத்துவக் கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த முதல்வருக்கு சுகாதார வல்லுநர்கள் கடிதம்
சென்னை, ஜூன் 13- கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரக் கட்டமைப்பை போர்க்கால அடிப்படை யில் மேம்படுத்தி,மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சுகாதார வல்லுநர்கள் குழுவின் சார்பில் தமிழக முதல மைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கோவிட் 19 நோய் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே 90 விழுக்காடு நோய்த் தொற்று காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்க ளில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் கார ணமாக வேலைக்குச் செல்வோரும், சிகிச்சைக் காக (கோவிட் மற்றும் இதர நோய்களுக்கு) செல்வோரும் பெரும்பாலும் சொந்த வாகனங்க ளையோ - தனியார் வாகனங்களையோ பயன் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு மையங்களும் நிரம்பி வருகின்றன. கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டு மிதமான அறிகுறியுடையோர் முதல் முற்றியநிலை அறிகுறியோடு இருப்பவர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனை களையே நம்பியுள்ளனர்.
அரசு அளிக்கும் தகவலின் படி அரசின் கோவிட் மருத்துவமனைகளில் மொத்தம் 17,433 படுக்கைகள் உள்ளன. நோய்த் தொற்று அறிகுறி யுடன் இருப்பவர்களுக்கும், வீட்டிலேயே தனி மைப்படுத்திக் கொள்ள வசதியில்லாத வர்களுக்கும் படுக்கைகள் காலியில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்படுவதாக மருத்து வர்கள் மற்றும் நோயாளிகள் மூலமாகத் அறிந்து கொள்ள முடிகிறது. இது நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது தவிர, மக்களின் உயிர்காக்கும் முன்னணி ஊழி யர்களான மருத்துவர்கள், செவிலியர் உட்பட பலர் தொடர்ந்து நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு வருவது அச்சமூட்டுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் சார்பில் பின்வரும் ஆலோசனைகளை அரசு பரிசீலித்து நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
1. அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்ற கோவிட் தொற்று நோயாளிக்கு அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் கோவிட் படுக்கைகள் காலி யாக இல்லை எனில் எந்த அரசு மருத்துவமனை யில் படுக்கை வசதியுள்ளது என்பதை அந்த மருத்துவ மனையிலேயே கண்டறிந்து, ஆம்பு லன்ஸ் வசதி செய்து கொடுத்து அனுப்பிவைக்க வேண்டும்.மாறாக,நோயாளியை தன் சொந்தவாக னத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ வேறு மருத்துவமனைகளைத் தேடி அலையும் நிலைக்கு ஆளாக்கி விடக் கூடாது. அப்படி நேர்ந் தால் நோயாளி நோய்த்தொற்றை பலருக்கும் பரப்பிட அதிக வாய்ப்புள்ளது. நோய் தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வருவதையும் அரசு தவிர்க்க வேண்டும்.
2. அரசு மருத்துவமனைகளில் படுக்கை கள் கிடைக்காத சூழ்நிலையில் தனியார் மருத்து வமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர் களுக்கு அரசு செலவில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்கு வசதியாக தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தபட்சம் படுக்கைகளில் 50 விழுக்காட்டை கோவிட் 19 நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தை முன் உதாரணமாக கொள்ளலாம். இதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை அரசே நேரடியாகவோ, காப்பீடு மூலமாகவோ செலுத்த வேண்டும்.
3. அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் உள்ள கோவிட் காலிப் படுக்கைகளின் எண்ணிக்கையை தினசரி இணையதளத்தில் வெளியிடவேண்டும். அத்தோடு மக்களுக்கு நேரடியாக உதவி பெற மக்கள் உதவி மையங் களை உருவாக்கித் தர வேண்டும்.
4. அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்படுத் தப்பட்ட மையங்களில் கண்காணிக்கப்பட்டு வரு பவர்களுக்கும் நோய் குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தரமான மனநல மருத்துவ வல்லுநர்களின் இணையவழி ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களையும், தேவையான எண்ணிக்கையில் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும். நோய்த் தொற்றுப் பணி யில் ஈடுபட்டு வரும் முன்னணி சுகாதார ஊழி யர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். அரசு ஏற்கனவே அறிவித்த பணப் பயன்கள் மற்றும் காப்பீடு போன்றவை தாமதம் இன்றி வழங்கப்பட வேண்டும். தங்கள் இன்னு யிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மருத்து வர்கள் கடந்த ஆண்டு ஒரு நியாயமான போராட் டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் தொலை தூரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களை மீண்டும் அவரவர் பணியிடங்க ளுக்கு மீண்டும் பணி அமர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் சென்னை போன்ற அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மருத்துவர் பற்றாக்குறையை ஓரளவு சரிசெய்ய முடியும்.'
6. பல்வேறு ஆய்வாளர்களும், பொது சுகா தார வல்லுநர்களும் நோயின் தாக்கம் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தான் உச்சத்தைத் தொடும் என்று கணக்கீடுகள் கூறுகின்றன.அதற்கேற்ப அச்சப்படத்தக்க வகையில் தினமும் உயர்ந்து வருகிற நோய் தொற்று எண்ணிக்கை கவலை யளிக்கிறது. இன்றைய நிலையிலேயே அரசு மருத்துவ மனைகளில் இடமில்லை என்ற நிலை உருவாகி யுள்ளதை கருத்தில்கொண்டு, பொது சுகாதாரக் கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும். கோவிட் 19 படுக்கை களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும்.
7. அரசு மருத்துவமனைகளில் கோவிட் நோய்த்தொற்று சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில் கோவிட் 19 அல்லாத பிற மருத்துவ சேவைகளையும் உடனடியாகத் தொடர வேண்டும். இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தடுப்பூசி சேவை முதலியவற்றை புறக்க ணிப்பது, கோவிட் தொற்று இறப்பு எண்ணிக்கை கூடுவதற்கு காரணமாக அமையும். எனவே வய தானவர்களையும், ஏற்கனவே ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப் பது மிகமுக்கியமான அரசின் கடமையாகும்.
8. தொற்று கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய்த் தொற்று உடையவருடன் தொடர்பு டைய அறிகுறிகள் உள்ளவர்கள், அறிகுறியில்லா தவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவ ருக்கும் நோய் இருப்பதைக் கண்டறிய பரி சோதனை செய்யவேண்டும். இதற்கு துரித பரிசோதனை முறைகளை (Rapid test Kit) பயன்படுத்தலாம். இதன் மூலம் நோய்ப்பரவலை சரியான முறையில் கணித்து, முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு நோய் பர வலை தடுக்கலாம்.
9. தமிழ்நாட்டில் இறப்பு எண்ணிக்கை விகி தம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும் வரும் நாட்களில் நோய்த் தொற்று அதிக எண்ணிக்கையில் உயரும். அதனை ஒட்டி மரண எண்ணிக்கையும் உயரும். இந்நோய்த் தொற்று காலத்தில் ஏற்படும் அனைத்து இறப்புகளை யும், அரசு மற்றும் அரசு சார்பற்ற மருத்துவ வல்லு நர்களை உள்ளடக்கிய குழு ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தீரும். அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதாக மக்கள் நம்பிட வாய்ப்பு ஏற்படும்.
10. தடுப்பூசித் தயாரிப்பதற்காக ரூ.700 கோடி செலவில் செங்கல்பட்டு அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுத்துறை தடுப்பூசிப் பூங்கா,கோவிட் உட்பட பல தடுப்பூசி மருந்து களைத் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு தேவையான கூடுதல் தொகையான ரூ.250 கோடியை உடனடியாக அந்நிறுவனத்திற்கு அளிக்கவேண்டும்.
11. முழு உடற்பாதுகாப்பு, உடைகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் , கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவற்றை தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.