tamilnadu

img

தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: டி.ஆர்.பாலு

சென்னை, ஜன.3- கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை திமுக தரப்பில் வியாழனன்று (ஜன.2) இரவு சந்தித்த  டி.ஆர். பாலு, தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கா மல் உடனே அறிவிக்கக் கோரி வலியுறுத்தி னார். வெளியில் வந்த டி.ஆர். பாலுவிடம் செய்தி யாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில்,“ தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரிய வில்லை. 2 முதலமைச்சர்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம். அல்லது ஏதாவது உயர் அதி காரி கட்டுப்பாட்டில் இருக்கலாம் என நினைக்  கிறேன்” என்றார். இந்த தேர்தலில் தவறு செய்கிற ஒவ்வொரு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க  வாய்ப்பு உள்ளது. இதை அவர்கள் புரிந்து  கொள்வார்கள் என நினைக்கிறேன். சில பிரச்ச னைகளை நீதிமன்றத்திலும் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

;