tamilnadu

img

வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்

தமிழக முதல்வர் உறுதி

சென்னை,மே 11- வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு  வாரத்திற்குள் சொந்த ஊருக்கு அனுப்பி  வைக்கப்படுவார்கள் என்று முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரி வித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைச் செய லாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 நாட்களாக சில மாவட்டங் களில் இருந்து வெளிமாநில தொழி லாளர்கள் ரயில் மூலம் அனுப்பப்படு கின்றனர். வேலை இல்லாத நிலையில் வெளிமாநில தொழிலாளர்களிடம் தற்போது ரயில் கட்டணத்துக்கான பணம்  இருக்காது.  அவர்களுக்கான பயண கட்டணத்தை அவர்கள் சேர்ந்த மாநில அரசுகளே செலுத்தலாம் என கூறப் பட்டது. ஆனால் தற்போது பல மாநில ங்கள் தொகையை செலுத்தாத நிலை யில் தற்போது தமிழக அரசே செலுத்த முடிவெடுத்துள்ளது.  அவர்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றையும் மாநில அரசே வழங்கும். இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர்  திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என மாநில தலைமை செயலாளர் களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இதுபோன்ற சென்ற தொழிலாளர்களில் 16 பேர் மராட்டியத்தில் சரக்கு ரயில் மோதி பலியாகினர்.  இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி தெரிவித்து உள்ளார். இதுவரை 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் 8 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  ஊருக்கு அனுப்பி வைக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் முகாம்களில் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;