tamilnadu

img

பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு?

ஈரோடு, ஜன.18- ஈரோடு மாவட்டம் பவளத்தாம் பாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ஜல்லிக் கட்டு குறித்து மாணவ, மாணவி யரிடையே விழிப்புணர்வு ஏற் படுத்த குறுந்தகடுகள் வழங்கப் படும். ஜல்லிக்கட்டை பாடத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்டோ ருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் போல் சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்க முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

;