tamilnadu

img

போராட்டத்தை சீர்குலைத்தால் களத்தில் இறங்குவோம்

மாநில அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை, அக். 29 - மருத்துவர்களின் போராட் டத்தை அரசு சீர்குலைத்தால் களத்தில் இறங்குவோம் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25 ஆம் தேதி முதல்  அரசு மருத்துவர்கள் காலவரை யற்ற வேலைநிறுத்தம் செய்து  வருகின்றனர். அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 5 வது நாளாக செவ்வா யன்று (அக்.29) போராட்டம் தொடர்ந்தது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு  பொதுமருத்துவமனையில் நடை பெறும் போராட்ட களத்திற்கு சென்று மருத்துவர்களுக்கு ஆத ரவு தெரிவித்து ஜி.ராம கிருஷ்ணன் பேசினார். அப்போது  அவர் பேசுகையில், “மருத்து வர்களின் போராட்டத்தை அச்சு றுத்தி போராட்டத்தை சீர்குலைத் தால் மார்க்சிஸ்ட் கட்சி களத்தில் இறங்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார். இதன்பின்னர் காலவரையற்ற உண்ணாநிலையிருந்து அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ள மருத்துவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறி னார். 

அதன்பின்னர் செய்தியாளர்க ளிடம் அவர் கூறுகையில், “6 மற்  றும் 7வது ஊதியக்குழு பரிந்து ரைகளை மருத்துவர்களுக்கு அமலாக்கவில்லை. இதனால் பிற  மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழக அரசு மருத்து வர்களுக்கு அடிப்படை ஊதி யத்தில் 50ஆயிரம் ரூபாய் குறை வாக உள்ளதால் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்” என்றார். “மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் அடிப்  படையில் அல்லாமல் நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோருகிறார்கள். ஏற்கெனவே இருந்த உயர்படிப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கி றார்கள். இவை அனைத்துமே நியாயமான கோரிக்கைதான். எனவே, முதலமைச்சரும், சுகா தாரத்துறை அமைச்சரும் அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

போராட்டம் தொடரும்

இதனிடையே மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி மருத்துவர் லட்சுமி நர சிம்மன் செய்தியாளர்களிடம் பேசு கையில், “சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான, மிகவும் குறை வான உறுப்பினர்களை கொண்ட  சங்கம் ஒன்று துறைச் செயலாளர்  பீலா ராஜேஷூடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. அந்தச் சங்கத்திற்கும் அரசு  மருத்துவர்கள் கூட்டமைப்பிற்  கும் எந்த சம்பந்தமும் இல்லை.  எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வில்லை. எனவே, முதல்வர் உட னடியாக தலையிட்டு கூட்டமைப்பு டன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக  தீர்வு காண வேண்டும். கோரிக்கை கள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.