தலைநகர் தில்லியில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை களில் மழைநீர் தேங்கி நின்றது.
பிரதமர் அலுவலக இணை செய லாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அமுதா நியமிக்கப்பட்டுள் ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ. எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார்.
காய்கறிகள் பயிரிடும் விவசாயி களுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப் கடும் என்று தமிழக அரசு அறிவித்து ள்ளது.
பிரேசிலில் நிதிமுறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள தால் இந்தியாவில் உள்ள 60 வங்கிக் கணக்குகளை முடக்க பிரேசில் அரசு வைத்த கோரிக்கையின் பேரில் இந்திய அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் வரும் ஜூலை 22ஆம் தேதி பதவி யேற்றுக் கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடி யில் ஆறாம் கட்ட அகழாய்வில் வட்டவடிவிலான செங்கல் கட்டு மானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டு மானத்தின் பயன்பாடு குறித்து தொல் லியல் துறையினர் ஆய்வு செய் கின்றனர்.
நெல்லை கூடங்குளம் அணு மின் நிலைய 2-வது உலையில் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத் ்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அணு உலையில் பராமரிப்பு பணி யால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளத்தில் 2 ஆயி ரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியில் இருந்து அடியில் இருந்து 7,100 கன அடியாக உயர்ந்துள்ளது.