சென்னை. டிச. 14- மத்திய அரசு மீண்டும் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது உள்நாட்டு வணிகத்திற்கு செய்யும் துரோ கம் என தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் குற்றம்சாட்டி னார். மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்துவதைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தி னர் மாளிகை அருகே த.வெள்ளை யன் தலைமையில் சனிக்கிழமை (டிச. 14) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதுகுறித்து வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதா வது: ஆன்லைன் வணிகத்தால் சில்லறை வணிகர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் வெளிநாட்டு வணிகர்களை அனுமதித்து, பொருளாதாரத்தைக் காப் பாற்றப் போகிறோம் எனக் கூறு கிறார்கள். உள்நாட்டு சிறு வணி கர்கள் எப்படி கார்ப்பரேட் நிறு வனங்களோடு போட்டிப்போட முடியும்.
தற்போது இருக்கின்ற வரி விகிதங்களே மக்களின் வாங்கும் சக்தியை நிர்மூலமாக்கி, வர்த்த கர்களை நிலைகுலைய வைத் துள்ளன. வேலை வாய்ப்பின்மை, இருக்கிற வேலைகளும் பறி போவது போன்ற சீரழிவுகளால் அல்லல்படும் எளிய மக்களை, ஜி.எஸ்.டி. என்கிற பேரழிவு மிக மிகக் கடுமையான பொருளா தாரச் சிக்கலில் ஆழ்த்தியுள் ளது. இதற்கு அரசின் தொலை நோக்கற்ற அந்நியச் சார்பு பொரு ளாதாரக் கொள்கைகளே கார ணம். இந்த யதார்த்தத்தை உண ராமல் ஜிஎஸ்டி வரிவிகிதத்தை மேலும் அதிகரிப்பது, மக்களின் வாங்கும் சக்தியை ஒட்டுமொத்த மாக அழித்துவிடும். அதன்மூலம் உற்பத்தி மேலும் குறைந்து பொரு ளாதார மந்த நிலையிலிருந்து பொருளாதாரப் பேரழிவு நிலைக்கு நாடு தள்ளப்படும். இது குறித்து வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் எஸ். ஆர்.பி.ராஜா, மாநில துணைத் தலைவர் பரமசிவன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ப.தேவராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் சௌந்தர ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.