tamilnadu

img

அரசு ஊழியர் ஓய்வு வயதை உயர்த்த தி.க. கடும் எதிர்ப்பு

சென்னை, மே 9- வேலைவாய்ப்பை எதிர்பார்த்து படித்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் காத்தி ருக்கும் ஒரு காலகட்டத்தில், தமிழ்நாடு அரசு பணி யாளர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 59 ஆக  உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திரா விடர் கழகத் தலைவர்  கி.வீரமணி  கூறி யுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில், பா.ஜ.க.வின் மத்திய அரசு, சமூகநீதிக்கு எதி ராக மாணவர் சேர்க்கையிலும், வேலைவாய்ப்பி லும் குழிபறிக்கும் நிலை ஒருபுறம் என்றால்,  எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா பேரில் ஆட்சி என்று  சொல்லிக் கொண்டே  69 சதவிகித இடஒதுக்கீட்டி னையும் காற்றில் பறக்கவிட கனகச்சித ஏற்பாடு போல, இரவில் வீட்டில் கன்னக்கோல் வைத்துப்  பொருளை எடுத்துச் செல்வதுபோல, 25,000 அரசு  வேலைவாய்ப்புகளை இப்படி ஓர் ஆணை யின்மூலம் எவ்வித முன்யோசனையுமின்றி - சில  அதிகாரிகளின் தவறான ஆலோசனை, வழிகாட்டு தலினை ஏற்று, தீராப் பழியை சுமக்கலாமா? இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

மண்டல் குழுப் பரிந்துரைகளின்படி பிற்ப டுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் மத்திய  அரசுப் பணியில் கிடைக்கவிருந்த சந்தர்ப்பத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பி.ஜே.பி.  அரசு, மத்திய அரசுப் பணியாளர்களின் ஓய்வு  வயதை திடீரென்று 60 வயதாக உயர்த்தியபோது,  அதனைக் கடுமையாக எதிர்த்து சைக்கிள் பேரணி யெல்லாம் திராவிடர் கழகம் - இளைஞரணி நடத்தி யதை இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம். இம்முடிவை அரசு மறுபரிசீலனை செய்யாவிடில்  திராவிடர் கழக இளைஞரணியினர், மாணவரணியி னர், மே 17க்குப் பின்னர் அறப்போராட்டங்களை நடத்து வது தவிர்க்க இயலாதது என்று கூறியுள்ளார்.