சென்னை, ஜூன் 12 - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராஜ்பவனில் புதனன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்தக் கூடாது என முதல்வர் ஆளுநரிடம் கூறியதாகவும், புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி நியமனம் தொடர்பாகவும் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.