சென்னை, மே 22-தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்ற காவல்துறையினரை தண்டிக்கும் வரையும் ஆலையை நிரந்தரமாக மூடும் வரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத் தும் நிகழ்ச்சி சிபிஎம் திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் புதனன்று (மே 22) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாலகிருஷ் ணன் பேசியதாவது: தூத்துக்குடி ஆலைக்கழிவுகளால் அந்த ஆலையை சுற்றி வசித்து வந்தமக்கள் பெரும்துயரத்திற்கு ஆளானார்கள்.கழிவுகளால் நிலத்தடி நீர்,கடல் வளம், காற்று உள்பட அனைத்தும்மாசுபட்டு சொல்லமுடியாத தொல்லைகளுக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட மக்கள் அந்த ஆலையை மூடுவதற்கு பல கட்டபோராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் தமிழக அரசு காதுகொடுத்து கேட்க மறுத்தது. கடைசியாக கடந் தாண்டு மே மாதம் 22 ஆம் தேதி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது காவல்துறையினர் கண்முடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஒரே நேரத் தில் 13 பேரையும் ஒட்டுமொத்தமாக 15 பேரையும் படுகொலை செய்தனர்.எளிய மக்கள், அப்பாவி மீனவர்கள், விவசாயிகள் வியாபாரிகள் என 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண் களும் துப்பாக்கி குண்டுகளுக்கு படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சைகளுக்கு பிறகுதான் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்கள்.அப்படிப்பட்ட கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது எடப்பாடி பழனிசாமி அரசு. இன்று அந்தநிகழ்வின் ஓராண்டு நினைவு தினத்தன்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்த தியாகிகளுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சியும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சியும்மாநிலம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிந்து வியாழனன்று (மே 23) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழ்நிலையில் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் காவல்துறையினர் இந்தநிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்க மறுத்துள்ளனர். இருந்தாலும் அந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். உண்மையிலேயே கொடூரமான படுகொலையை செய்திருக்கக் கூடிய காவல்துறை மீது ஒரு சிறு நடவடிக்கையை கூட எடப்பாடி அரசு எடுக்கவில்லை. ஒருவர் கூட பணியிடை நீக்கம்செய்யப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தவழக்கை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை காவல் துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே மூடப்பட்ட ஆலையை திறக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தின்வேதாந்தா குழுமம் கடுமையான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேதாந்தா குழுமத்திற்கு எதிராகஉச்சநீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்து அந்த ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று வழக்காடி வருகிறோம்.தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.உச்சநீதிமன் றம் இந்தப்பிரச்சனையை சென்னைஉயர்நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப்பொறுத்தவரை 13 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீது அரசுநடவடிககை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும். திறப்பதற்கு மேற்கொள் ளப்படும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து நாங்கள் போராடுவோம். தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கொடூரமான படுகொலையை செய்துள்ள எடப்பாடி அரசாங்கம் நிச்சயமாக மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அனைத்துதொகுதிகளிலும் படுதோல்வியடையப்போவது உறுதி. இதனால் அந்த அரசுவிரைவில் தூக்கியெறியப்படும். அதுதான் தூத்துக்குடி தியாகிகளுக்கு செய் யப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பாக்கியம், கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.