சென்னை, அக். 2- தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட ஆய்வில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருந்த 125 வீடு, வணிக நிறுவனங்களுக்கு ரூ.1.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். பருவமழை தொடங்கி யுள்ள நிலையில் தற்போது கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. இத னால், சென்னை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங் களில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் மருத்துவ மனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, வேலூர் மாவட்டம் முழுவ தும் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நட வடிக்கை மேற்கொண்டுள் ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் வார்டுக்கு 5 பேர் வீதம் 60 வார்டுகளுக்கு 300 களப்பணியாளர்கள் நிய மிக்கப் பட்டு வீடுகள், வணிக நிறுவனங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மாநகராட்சி அதி காரிகள் நடத்திய ஆய்வில், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகை யில் தண்ணீரை தேக்கி வைத் திருந்ததாக 125 வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1.34 லட்சம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, அபராதம் விதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய வகை யில் தண்ணீரை தேக்கி வைத்திருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்ச ரித்துள்ளனர்.