நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் அறிவிப்பு
சென்னை, டிச. 6- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடியாக உதவியாளர்களை நியமனம் செய்ய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நுகர்பொருள் வாணிபக் கழ கத்திற்கு உதவியாளர்களை நேரடியாக நியமிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. உதவியாளர்களை நேரடியாக நியமனம் செய்தால், தற்போது பணியாற்றும் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகும். எனவே, நேரடி நியமனத்தை கைவிட வலியுறுத்தி அனைத்து மண்டலங்க ளிலும் ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று (டிச.6) சென்னை கோபாலபுரத்தில் உள்ள முது நிலை மண்டல மேலாளர் அலுவல கம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.குமார், “உதவியாளர் நேரடி நியமனத்தை கைவிட வேண்டும், கொள்முதல் நிலைய ஊழியர் களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும், நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு நாற்காலி வழங்குவ தோடு, கழிப்பிட வசதியை ஏற்ப டுத்தி தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12 அன்று சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் உள்ள தலைமையகம் முன்பு மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெறும்” என்றார். சென்னை வடக்கு மண்டலத் தலைவர் ஏ.அறிவழகன் தலை மையில் நடைபெற்ற இப்போராட் டத்தில், மாநில பொதுச் செயலா ளர் ஆர்.புவனேஸ்வரன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.லூர்து சாமி, சென்னை தெற்கு மண்டலச் செயலாளர் ஆர்.ஜார்ஜ் பெர் ணான்டஸ், வடக்கு மண்டலச் செயலாளர் பி.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.