tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு  

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 488 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,823 பதவியிடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.  அதன்படி இன்று (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மாலை 5 மணிவரை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாக்களிக்க அனுமதித்தனர்.  

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.  அதன்பின்னர் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

;