tamilnadu

img

கொச்சைப்படுத்திய முதல்வர்: திமுக, காங். வெளிநடப்பு

சென்னை,ஜூலை 15- தபால் துறை போட்டித்தேர் வில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்ட விவகாரம் குறித்து தமிழக சட்டப் பேரவையில் திங்களன்று (ஜூலை 15) கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து  பேசுகையில், “மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகை யில் ஒரு தீர்மானத்தை பேரவை யில் அரசு சார்பில் கொண்டு வரவேண்டும்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், “இரண்டு கட்சி களும் இந்த பிரச்சனையில் ஒத்த  கருத்தோடு இருப்பதால் மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மா னம் கொண்டுவருவதில் தயக்கம்  ஏன்”? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்வரும், முதலமைச்சரும் பதில் அளிக்கை  யில்,“மக்களவை மற்றும் மாநி லங்களவையில் இரண்டு கட்சி  உறுப்பினர்கள் அங்கு எழுப்பு தற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு மத்திய அரசு என்ன பதில்  சொல்கிறார்கள்? என்பதை பொறுத்து அதற்கேற்ப முடிவு எடுக்கலாம்” என்றார். இந்த விவகாரத்தில் துரை முருகன் தொடர்ந்து குறுக்கிட்டுக்  கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த முதல மைச்சர்,“ கடந்த காலத்தில் எங்கள் எம்.பி.க்கள் 37 பேர் என்ன சாதித்தீர்கள்? என கேள்வி எழுப்பினீர்களே? இப்போது உங்கள் உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்களே அவர்கள் இதைப்பற்றி அங்கு பேச வேண்டி யது தானே?” என்றார். இதனையடுத்து பேசிய துரை முருகன், “இது ஒரு உணர்வுபூர் வமான பிரச்சனை. இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரச் சொல்கிறோம். ஆனால், முதல்வர் அதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதை கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம்” என்றார். இத னையடுத்து, திமுக உறுப்பி னர்கள் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். இந்த விவகாரத்தில் மத்திய  அரசை கண்டித்து தீர்மானம் நிறை வேற்ற அதிமுக அரசு முன்வராத தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் இந்திய  யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பி னர் அபுபக்கரும் வெளிநடப்பு செய்தனர்.