tamilnadu

img

மாணவர் சங்க சைக்கிள் பிரச்சார பயணக் குழுவிற்கு பாராட்டு

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தமிழகம் தழுவிய சைக்கிள் பிரச்சார பயணம் வெள்ளியன்று திருச்சிராப்பள்ளியில் நிறைவுபெற்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவர் சூர்யா, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் ஐயப்பன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரகுவன்ஸ் உள்ளிட்டோரையும் மற்றும்  பயணக் குழுவில் பங்கேற்ற 300 மாணவ - மாணவிகளையும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்டி கௌரவித்தார். திருச்சிராப்பள்ளி செந்தண்ணீர்புரம் மாநகராட்சிப் பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்ற கீர்த்தனாவை இந்திய மாணவர் சங்கத்தினர் கௌரவித்தனர்.