சென்னை, ஏப்.1- சென்னை அண்ணா அறிவால யத்தில் உள்ள கலைஞர் அரங் கத்தை கொரோனா தனிமைப்ப டுத்தும் வார்டுக்கு பயன்ப டுத்தி கொள்ளலாம் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா விழிப்பு ணர்வு பிரசாரம் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அரசியல் கட்சி கள், சேவை அமைப்புகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. இந்த நிலை யில் சென்னை அண்ணா அறி வாலய அரங்கத்தை கொரானோ தனிமைப்படுத்தும் வார்டுக்கு பயன்படுத்தலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார். இது குறித்து தி.மு.க. அறக்கட்டளை தலைவரும், மேலாண்மை அறங்காவலரு மான மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகா சுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை தேனாம் பேட்டை அண்ணா சாலை அண்ணா அறிவாலயம் வளா கத்தில் இருக்கும் “கலைஞர் அரங்கத்தை”, கொரோனா வைர சால் பாதிக்கப்படு வோர், தம்மை தனிமைப்படுத்திக் கொள்வ தற்கு, அரசு சார்பில் பயன்ப டுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அரசு சார்பில் “கலைஞர் அரங்கத்தை” பயன்படுத்தி, உரிய ஏற்பாடுகளை செய்யவரும் அதி காரிகளுக்கு, தி.மு.க.வின் சார்பில் தேவையான ஒத்து ழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணை யர் பிரகாசை நேரில் சந்தித்து அளித்தனர்.