இடா நகர்,மே 21-அருணாச்சலப்பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் என்.பி.பி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியாகினர். அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு கோன்ஸா பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று மதியம் இந்த தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் என்.பி.பி. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திராங்அபோ உட்பட அவரது குடும் பத்தினர் 7 பேர் பலியாகினர். இந்ததாக்குதலை என்.எஸ்.சி.என். தீவிரவாத குழுவினர் நடத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள என்.பி.பி கட்சி தலைவரும், மேகா லயா மாநில முதல்வருமான கான்ராட் ஷர்மா, இது தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார்.