திருவண்ணாமலை,மார்ச் 4- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே, கடந்த ஜன. 11 மற்றும் ஜன. 30 ஆகிய இரண்டு தேதிகளில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் 3 வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத் தில் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்வு மற்றும் துணைத் தலைவர் தேர்வு கள், நிர்வாக காரணங்களால் 3வது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள 20 மொத்த உறுப்பினர்களில் 8 திமுக, காங்கிரஸ் 1, சுயேட்சை 1 உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் மட்டுமே, புதன் காலை நடைபெற்ற மறைமுகத் தேர்வில் கலந்துகொள்ள அலுவலகத்திற்கு வந்தனர். 3 அதிமுக உறுப்பினர்களும் 7 சுயேட்சை உறுப்பினர்களும் என மொத்தம் 10 உறுப்பினர்கள் மறைமுக தேர்வில் பங்கேற்கவில்லை. எனவே, ஒன்றியக் குழுத் தலைவர் தேர்வுக்கான போதிய உறுப்பினர்கள் இல்லாத தால், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் மறு தேதி அறிவிக்கா மல் 3 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.