tamilnadu

img

நூறு நாள் வேலைக்குச் சென்று திரும்பும்போது விபத்தில் படுகாயமடைந்த 40 தொழிலாளர்கள்

திருச்சிராப்பள்ளி, மே 20-நூறு நாள் வேலைக்கு சென்று திரும்பும் போது சாலை விபத்தில் படுகாயமடைந்த 40 தொழிலாளர் களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தோளூர்ப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும், நூறு நாள் வேலை பாலசமுத்திரம் கிராம மக்களுக்கு குடியிருப்பு பகுதியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் சக்கிலியப்பட்டி கிராமத்தில் வேலை வழங்கப்பட்டு வந்தது. போக்குவரத்து வசதி இல்லாததாலும், ஊராட்சி நிர்வாகம் போக்குவரத்து வசதி செய்து கொடுக்காததாலும் நூறு நாள் வேலை தொழிலாளர்கள் தங்கள் சொந்த பணத்தில் தினமும் வேனில் வேலைக்கு சென்று திரும்பியுள்ளனர். கடந்த 14-05-2019 செவ்வாய் அன்று சக்கிலியப்பட்டி செல்வராணி நிலத்தை சீரமைக்கும் வேலை செய்து முடிந்து 44 தொழிலாளர்கள் வேனில் வீட்டிற்கு திரும்பிய போது, வெற்றி விநாயகா கல்லூரி அருகே வேன் கவிழ்ந்து சாலை விபத்திற்குள்ளானது. இதில் 41 பேர் காயமடைந்த நிலையில் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

25க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் கடுமையான காயமடைந்ததால் மேல் சிகிச்சை பெற சேலம், நாமக்கல்,திருச்சி அரசு மருத்துவமனை களிலும், பல்வேறு தனியார் மருத்துவ மனைகளிலும் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைக்காயத்திற்கும், கை, கால் எலும்பு முறிவுகளுக்கும் அறுவை சிகிச்சை 10க்கும்மேற்பட்டவர்களுக்கு செய்யப்பட் டுள்ளது. மேலும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்மாவதி என்பவருக்கு 2 கைகளிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் காலதாமதம் செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதே போல இந்த மருத்துவ மனையில் சரஸ்வதியின் வலது காலிலும், மல்லிகா என்பவருக்கு இடது கையிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இன்று நாளை என அரசு மருத்துவமனை இழுத்தடிப்பதாகவும் வலி தாங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அவர்கள் இருவரும் நம்மிடம் தெரி வித்தனர். இவர்களுக்கு உடனே அறுவை சிகிச்சை நடைபெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 7 பெண்கள் உள் நோயாளி யாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் பெருமாள், சரோஜா ஆகிய இருவரும் கொடுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனையில் விஜயா என்பவர் முற்றிலும்வலது கை முறிவு ஏற்பட்டு செயலிழந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். லெட்சுமி என்பவர் வலது கண்ணில்காயமேற்பட்டு பார்வை ஊனமேற்படும் நிலையில் உள்ளார். இவர்களோடு பெரியக்காள், ச.பத்மாவதி, நீலாவதி, பரமேஸ்வரி, சசிகலா, வளர்மதி, செ.பத்மாவதி, ராதா, மருதாம்பாள், சுதா, லெட்சுமி, சாந்தி, பிச்சையம்மாள், பாப்பாத்தி, வீ.சரசு, க.சரசு ஆகியோர் தலைக் காயத்துட னும், கை, கால் காயத்துடன் விலா எலும்பு முறிவுடனும், முதுகு தண்டுவடகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒரு கோரவிபத்தாகும்.

உயர் சிகிச்சை ஊதியம் கிடைக்க...

அன்றாடம் கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தி வரும் ஏழை விவசாயத்தொழிலாளர் பெண்கள் 39 பேர்இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்து ள்ளனர். அன்றாட செலவுக்கே அல்லல்படும் இவர்கள் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ குடும்ப வருவாய்க்கு வழி யின்றி உணவுக்கும், மருத்துவமனை சென்று வருவதற்கும் கடன் வாங்கி செலவழிக்கும் நிலையில் செய்வதறி யாது தவிக்கின்றனர். எனவே மாநிலஅரசு உடனடியாக தலையீடு செய்து உயர் தர சிகிச்சை கிடைக்க நட வடிக்கை எடுத்திட வேண்டும் என தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோரிடம் சங்கத்தின் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க திருச்சி புறநகர் மாவட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர். 

நேரில் ஆறுதல்

முன்னதாக பாதிக்கப்பட்ட தொழி லாளர்களை விதொச மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், மாநிலச் செயலாளர் அ.பழநிசாமி, தவிச மாவட்டத் தலைவர் பி.ராமநாதன், விதொச ஒன்றியச் செயலாளர் கே.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மு.க. முருகானந்தம், பாலசமுத்திரம் தோழர்கள் மணிவண்ணன், தனபால்,சந்திரசேகரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.