சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது 5 தமிழக அமைச்சர் கொண்ட குழுவை அமைத்து சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய உள்ளது. இந்த குழுவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மீன்வளத்துறை ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர். பின்னர் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.