tamilnadu

img

ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோ மற்றும் ரிக்‌ஷாக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைமையில், சமூக இடைவெளியுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம்  நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்  முன்பு நேற்று போராட்டம்  நடைபெற்றது. இதை தொடர்ந்து, தற்போது, தமிழகத்தில், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோ மற்றும் ரிக்‌ஷாக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது . சில நிபந்தனைகளுடன் ஆட்டோ மற்றும் ரிக்‌ஷாக்களை, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயக்க அனுமதிக்கப்படுகிறது.

;