சென்னை
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களை தவிர்த்து உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்தது. இதே போல தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் விருதுநகர் மாவட்ட பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வெப்பம் தணிந்தது.