கே.பாலகிருஷ்ணன் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, ஏப். 14 - கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து குடும்ப அட்டை களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் செவ்வாயன்று (ஏப்.14) மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகமே கொரோனாவை எதிர்த்து போராக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் வரலாற்றில் சந்திக்காத பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். இந்திய மக்களிடையே 4வது முறையாக உரையாற்றிய பிரதமர், ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீடித்து அறிவித்துள்ளார். இது மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதேசமயம், நாடு சந்திக்கும் பிரச்ச னைகளுக்கு நல்ல பல திட்டங்களை அறிவிப்பார் என்று மக்கள் எதிர் பார்த்தனர். ஊரடங்கால் முடங்கி கிடக்கிற மக்களின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு, பசியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு திட்டங்களை அறிவி க்காதது அதிர்ச்சியையும், ஏமாற்ற த்தையும் அளிக்கிறது.
ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் உரை தேவையா?
ஏற்கெனவே 3முறை உரையாற்றி யது போன்று இந்தமுறையும் நாட்டு மக்களை பற்றி கிஞ்சுத்தும் ஒரு வார்த்தை பேசாமல் பிரதமர் தவிர்த்துள்ளார். மாநில முதல்வர்களே ஊரடங்கை நீட்டித்து அறிவித்துக் கொண்டு உள்ளனர். இந்த சூழலில் ஊரடங்கை நீட்டிப்பதற்கு பிரதமர் உரை தேவையா?
நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. சிறுகுறு தொழில்கள் அழிந்து கிடக்கிறது. விவசாயிகள் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கின்றனர். உழைப்பாளிகள் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் தவிக் கின்றனர். பசி கொடுமையால் ஒரு தாய் கங்கை ஆற்றில் குழந்தை களை வீசி எறிந்துள்ளார். வர லாற்றில் இல்லாத அளவுக்கு இவ்வளவு கொடுமைகளை மக்கள் சந்திக் கின்றனர். இதுகுறித்தெல்லாம் பிரதமர் ஒன்றுமே சொல்லவில்லை. நாட்டு மக்களை பற்றி பிரதமர் கவலைப்பட வில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஹாட் ஸ்பாட் தமிழகம்
ஏப்.20ந் தேதிக்கு பிறகு, கொரோ னா தொற்று கடுமையாக இல்லாத நிலையில் சில தளர்வுகளை அறி விக்கப்படும் என்று பிரதமர் கூறியி ருக்கிறார். தமிழகம் கொரோனா தொற்றின் ஹாட் ஸ்பாட்டாக உள்ளது. கொரோனா தொற்று அதிகம் பாதித் துள்ள தமிழகத்தில் ஏப்.20க்கு பிறகு தளர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை.
உலக நாடுகள் தங்களது ஜிடிபி-யில் 15 விழுக்காடு வரை கொரோனா தடுப்புக்கு செலவிடுவதாக அறிவித் துள்ளது. ஆனால் மத்திய அரசு ஒரு விழுக்காடு கூட செலவிடப் போவதாக அறிவிக்கவில்லை. மாறாக, மாநில அரசுகள் தங்கள் செலவினங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்துவதாக கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி யளிக்கிறது.
கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் மாநில அரசுகள் அதிகளவு நிதி கோரியுள்ளன. மத்திய அரசு தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலு வையை வழங்காமல் உள்ளது. நிவார ணத்திற்கு 9 ஆயிரம் கோடி, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி வேண்டுமென்று முதலமைச்சர் மத்திய அரசிடம் கேட்டார். 19 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். பிரதமர் காணொளியில் பேசும்போது உடனடியாக 1000 கோடி ரூபாயாவது கேட்டார். மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிப்பதாகவே தெரியவில்லை. மாநில அரசுகளின் நிதியாதாரத்தை அதிகரிக்காமல் எப்படி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட முடியும்.
கொரோனா எதிர்ப்பு போராட் டத்தில் வெற்றிபெற வேண்டுமெனில் மக்களின் பொருளாதார தேவையை ஈடுகட்ட வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நிவாரணமாக வழங்க வேண்டும். மாநில அரசுகள் கேட்கும் நிதியை விரைந்து வழங்க வேண்டும். பரிசோதனை கருவிகள் வாங்க மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படக்கூடாது.
அர்பணிப்புமிக்க பணி
மாநில அரசு சிறப்பாக பணியாற்று வதாக சொல்லிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதா ரத் துறை ஊழியர்கள், அரசு அதிகாரி கள், ஊழியர்கள், காவல்துறையினர் அர்ப்பணிப்போடு பணியாற்று கின்றனர். ஓரளவு நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதற்கு இவர்களின் அர்ப்பணிப்புதான் காரணம். ஆனால், மருத்துவர் களுக்கும், செவிலியர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. இதனால் அவர்க ளும் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள 50 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், ஒப்பந்த தொழிலாளர்களையும் இணைக்க வேண்டும்.
வெளிப்படைத்தன்மை தேவை
ஊரடங்கை நீட்டித்துள்ளதாக திங்களன்று (மார்ச் 13) முதலமைச்சர் அறிவித்தார். அதற்கு முந்தைய நாள் பிரதமர் அறிவிப்பார் என்று தலைமை செயலாளர் கூறினார். இதில் உள்ள உள் அரசியல் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நோய் பரவல் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் வெளிப்படைத்தன்மையோடு அணுக வேண்டும்.
பரவலான பரிசோதனை
8 கோடி மக்கள் தொகையில் உள்ள தமிழகத்தில் சுமார் 10ஆயிரம் பேர் அளவுக்குத்தான் சோதனை நடத்தப் பட்டுள்ளது. மிகக்குறைவான அளவுக்கு சோதனை செய்யும் நாடக இந்தியாவும் தமிழகமும் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூறியபடி அதிகளவு சோதனை நடத்தினால் தான் உண்மையான பாதிப்பை கண்டறிய முடியும். எனவே, ராபிட் டெஸ்ட் கருவியை வாங்கி பரவலாக அதிகளவு பரிசோதனை செய்ய வேண்டும்.
ஏற்கெனவே 15 நாள் ஊரடங்கு அறிவித்தபோது குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாயும், உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். தற்போது மீண்டும் ஊரடங்கு 15 நாள் நீட்டித்து அறிவித்தபோது 1000 ரூபாய் வழங்கப் படும் என்ற அறிவிப்பு இல்லை.
அனைத்துக் கட்சிகளையும் இணைத்து செயல்படுங்கள்
விவசாயிகளின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுகுறு நிறுவனங்கள் மூடி கிடக்கின்றன. மத்திய அரசு 3 மாதம் இஎம்ஐ கட்டுவதை ஒத்திவைப்பதாக கூறியது. பிறகு ஒத்திவைக்கப்பட்ட இஎம்ஐ-க்கு வட்டி போடுவதால் அதன்பலன் சிறுகுறு தொழில்களுக்கு கிடைக்கவில்லை. இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. எனவே, தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, கருத்துக்களை கேட்டு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கோரியபோது அரசு மறுத்து விட்டது. மேலும் 15 நாள் நீடித்துள்ள நிலையில், மே மாதம் 3ந் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வருமா என தெரியவில்லை. எனவே, அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும்.
வழக்குகளை திரும்ப பெறுங்கள்
ஊரடங்கை மீறியதாக 1.60 லட்சம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 1.25 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மக்கள் தவிர்க்க முடியாத சூழலில் வெளியே வருகின்றனர். மனிதநேய அடிப் படையில் வழக்கை வாபஸ் பெற்று, எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு வாகனங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
வெளிமாநிலங்கள், வெளிநாடு களில் உள்ள தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். பல இடங்களில் உணவு கிடைக்காமல் அவதிப்படு கின்றனர், இதுதொடர்பாக அந்தந்த நாடு, மாநில அரசுகளோடு பேசி அவர்களுக்கான பாதுகாப்பு, உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக கேரள அரசு செயல்படுவதாக உலக நாடுகள் பாராட்டுகின்றன. எந்த அரசு திறமையாக செயல்படுகிறதோ அந்த அரசின் அனுபவங்களை பெற்று மற்ற அரசுகள் செயல்பட வேண்டும். மார்ச் 25ந் தேதி மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. மாறாக, ஹோலி கொண்டாடுவதில்லை என்று பிரதமரும், குடியரசுதலைவரும் முடிவெடுத்தபோது, இந்தியாவில் கொரோனா பரவி உள்ளது என்று உலகசுகாதார நிறுவனம் எச்சரித்த நிலையில் மார்ச் 3ந் தேதியே கட்டுப் பாட்டை, ஊரடங்கை அறிவித் திருந்தால் இந்தியாவில் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டிருக்க மாட்டார்கள். தமிழகத்திலும் இவ்வளவு மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
உலக நாடுகள் பாராட்டும்படி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டி ருக்கிறேன் என்று பிரதமர் சுய புராணம் பாடி மக்களிடம் உரையாற்று கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரிய தோல்வி அடைந் துள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
கேரள அரசு தொற்று பரவுவதை தடுப்பதில் சிறப்பாக செயல் பட்டால்கூட, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா பெருமை பேசவில்லை. மாறாக, ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் இந்த தொற்று மிக வேகமாக பரவும். அதை தடுப்பதற்கு இன்னும் விழிப்போடு இருக்கிறோம் என்று பொறுப்போடு பேசுகிறார். தமிழகத்தில் நோய் தொற்று குறைய வில்லை. முதலமைச்சரே மூன்றாவது கட்டத்தை நோக்கி சென்று கொண்டி ருப்பதாக கூறிவிட்டு, மத்திய அரசும், தமிழக அரசும் சிறப்பாக செயல் படுவதாக கூறிக்கொள்கிறார்கள்.
எமர்ஜென்சி அமலில் உள்ளதா?
ஏப்,15 அன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து காவல்துறை ஆணையரோடு ஆலோசிப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டியளித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டம் தெருவில் கூட்டவில்லை. அரங்கத்தில் தலைவர்கள் கூடி பேசப்போகிறோம். இதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் நடத்த அரசு அனுமதி பெற்றுத்தான் நடத்த வேண்டும் என்றால், தமிழகத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்க நோய் பரவலை தடுக்கத்தானே தவிர, மனித உரிமைகளை, அரசியல் கட்சி உரிமைகளை பறிப்பதாக இருக்கக்கூடாது. சென்னை மாநகராட்சி ஆணையரின் கூற்று வன்மையான கண்டனத்திற்குரியது.
சுகாதரத்துறை அமைச்சர் எங்கே?
தமிழக மக்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எதிர்க் கட்சிகளும் இணைந்து பணியாற்ற அனைத்து கட்சி கூட்டம் அவசியம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வறட்டு பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
தமிழக அமைச்சரவை ஒருமித்த கருத்தோடு செயல்படுகிறதா? என்பதே சந்தேகமாக உள்ளது. முதலமைச்சரை தவிர வேறு யாரும் பேசுவதில்லை. கொரோனா தொற்று குறித்து பேச முழுமையான வாய்ப்பு உள்ளவர் சுகாதாரத்துறை அமைச்சர். அவர் மருத்துவர். நோய் சம்பந்தமான அதிக விவரம் அறிந்த அமைச்சர் கடந்த 10 நாட்களாக எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அமைச்சரை விட துறை செயலாளர் என்ன கூறிவிட முடியும்? அமைச்சரை பேச அனுமதிக்க மறுப்பது ஏன்?
குழப்பத்தில் தமிழக அரசு
ஒருநாள் முதல்வர், மற்றொரு நாள் தலைமை செயலாளர், அதற்கடுத்த நாள் சுகாதாரத்துறை செயலாளர் என மாறிமாறி பேசுகின்றனர். ஊரடங்கை பிரதமர் அறிவிப்பார் என்றீர்கள். பிறகு முதலமைச்சரே அறிவிக்கிறார். ஒருநாள் முக கவசம் கட்டாயம் இல்லை என்கிறீர்கள். அடுத்தநாள் கட்டாயம்: அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் என்கிறீர்கள். கொரோனா பாதிப்பால் ஒட்டு மொத்தத்தில் தமிழக அரசு குழம்பிப்போய் உள்ளது.
எதிர்க்கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் சமூக அக்கறையோடு மக்களுக்கு பணியாற்றுவதை முடக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார.
இச்செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உடனிருந்தார்.