உச்சநீதிமன்றம் தீர்ப்பு; பழைய அறிவிப்பு ரத்து
புதுதில்லி,டிச.6- தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர, இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி, தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங் களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், வார்டு மறுவரை யறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். வார்டு மறுவரையறை பணி கள் நிறைவடைந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளாட்சித்தேர்தல் அறி விப்பாணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுகவின் மனு மற்றும், 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசா ரணை உச்சநீதிமன்றத்தில் வியாழ னன்று நடைபெற்றது. விசாரணையின் போது, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருப்ப தாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. அனைத்து வாதங்களையும், விளக்கங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீர்ப்பை வெள்ளியன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் வெள்ளியன்று காலை 10.30 மணியள வில் தீர்ப்பளித்தது. ஒன்பது மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்திற்கு அனுமதியளித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
வார்டு வரையறைப்பணிகள் முடி வடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடத்த தடை விதிப்ப தாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணைக்குத் தடை விதிப்ப தாகவும், எனவே, புதிய அரசாணை வெளியிட்டு தேர்தலை நடத்துமாறு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணை யத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அறிவிப்பாணை வாபஸ்
உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமை யாக படித்து முடித்து, ஆய்வு செய்த பின்னரே, புதிய அறிவிப்பாணை உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை கள் குறித்து ஆலோசித்து முடிவெடு க்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு களிலும் மாற்றங்களை செய்ய மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 6 வெள்ளி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவிருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை, வேட்பு மனுக்களை பெற வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெள்ளியன்று காலையில் சுற்றறிக்கை அனுப்பியது.