tamilnadu

img

துறை செயலாளர்களுக்கு திட்டமிடும் பொறுப்பு

பொருளாதார பின்னடைவைத் தடுக்க  திட்டக்குழுவும் ஆய்வு செய்யும்

பொருளாதாரத்துறை, தொழில்துறை, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக கடந்துவிட முடியாது. அந்தந்த துறை வல்லுநர்களுடன் விவாதித்து விரிவான திட்டம் உருவாக்கப்படும். நாடு பின்னோக்கி செல்லாமல் இருப்பதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்படும். துறை செயலாளர்களிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. துறைவாரியாக சிறப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றை ஒருங்கிணைத்து மாநிலத்திற்கான ஒட்டுமொத்த திட்டம் உருவாக்கப்படும். திட்டக் குழுவும் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கொரோனா ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:  கேரளத்தில் செவ்வாயன்று மேலும் 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கண்ணூர் மாவட்டம் 3, கோழிக்கோடு 1என நான்கு பேர் நோயிலிருந்து விடுபட்டனர். கண்ணூர், காசர்கோடு தலா இருவர். இதுவரை 485 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 123 பேர் சிகிச்சையில் உள்ள னர். இதுவரை 23,980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 23,277 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியாகின. சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், சமூக செயற்பாட்டா ளர்களிடமிருந்து 885 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 801 தொற்று இல்லை. 

கொரோனா இல்லாத காசர்கோடு

திங்களன்று 3101 மாதிரிகள் கேரளத்தில் உள்ள 14 ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் 2682இல் நோய் தொற்று இல்லை. 3 முடிவுகள் நோய் தொற்று இருப்ப தாக வந்துள்ளன. 391 முடிவுகள் வர வேண்டும். 25 மாதிரி கள் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. நோய் இருப்பவர்கள் கண்டறிந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். கேரளத்தில் மிக அதிகமாக 175 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானது காசர்கோடு மாவட்டத்தில். அங்குள்ள பொது மருத்துவமனையில் 89 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இங்கிருந்த கடைசி நோயாளியும் குணமடைந்து செவ்வாயன்று வீடு திரும்பினார். காசர் கோடில் உள்ள 200 பேர் கொண்ட சுகாதார ஊழி யர்களை பாராட்டுவதாக முதல்வர் கூறினார். 

உள்ளாட்சி அமைப்புகளின் தலைமையில் கழிவுகள் அகற்றுவதற்கான கூடுதல் தலையீடு தேவை. சில இடங்க ளில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. அவை அகற்றப்பட வேண்டும். ஏற்கனவே அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் அதன் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட வேண்டும். தூய்மை பணிகளை ஏற்கனவே உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், வெளிமாநில தொழிலா ளர்களை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வேலை இல்லாத நிலையில் இந்த வகை யில் வேலை வழங்குவது உதவிகரமாக அமையும். 

முகக் கவசம் கட்டாயம்

பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம். இது அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதில் பெரும் அலட்சியம் நிலவுகிறது. பள்ளிக்கூடங்களிலும், பய ணங்கனின்போதும் மக்கள் கூடும் இடங்களிலும் முக கவ சம் அணிவது கட்டாயமாகும். மற்ற மாநிலங்களிலிருந்து வருவோர் எல்லையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படு வார்கள். இதை அனைத்து துறைகளும் இணைந்து செய் யும். இது குறித்து பிற மாநிலங்களுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கான பொறுப்பு முதன்மை செய லாளர் விஸ்வநாத் சின்ஹாவிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. கண்காணிப்பில் கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப் படும். ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து மே 3இல் புதிய முடிவுகளுக்கு போகலாம். அனைத்துப் பகுதிகளை யும் கருத்தில் கொண்டு பொருத்தமான நிலைபாடு மேற்கொள்ளப்படும். கோட்டயம், இடுக்கி மாவட்ட அனு பவங்களைக் கொண்டு கேரளத்தின் பிரச்சனைகளை மேலும் கவனமாக ஆய்வு செய்யப்படும்.

கடந்த இரண்டு நாட்களாக சாலைகளிலும் சந்தைகளி லும் கூட்டம் காணப்படுகிறது. திருவனந்தபுரத்திலேயே அதிக அளவிலான வாகன நெரிசல் உள்ளது. காவல்துறை யும் மாவட்ட நிர்வாகமும் இதில் வலுவாக தலையிட வேண்டும். மழை தொடங்கியதோடு காய்ச்சல் போன்ற வற்றால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. நோய் பரவலுக்கு மருத்துவ மனைகள் அதிக வாய்ப்புள்ளவை என்பதை நாம் கவ னத்தில் கொள்ள வேண்டும். அதை புரிந்துகொண்டு தனி மனித இடைவெளியையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பின்பற்ற தனிக்கவனம் செலுத்த வேண்டும். சுகாதா ரத்துறை அதைச் செய்யும். தனியார் மருத்துவமனைகளி லும் அலட்சியம் ஏற்படக்கூடாது. 

தயார் நிலையில் கேரளம்

வெளிநாடுகளில் வாழ்வோர் அங்கிருந்து வரும்போது அவர்களை வரவேற்க கேரளம் தயாராக உள்ளது. அதற்காக அரசு செயலாளர் அளவிலான குழு அமைக்கப் பட்டுள்ளது. அந்த குழுவின் கூட்டம் செவ்வாயன்ற நடந்தது. விரிவான விவாதம் நடத்தப்பட்டது. ஆரம்ப கட்ட கணக்குகளின்படி மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், திரிச்சூர் மாவட்டங்களுக்கு அதிகமானோர் வர உள்ளனர். ஒவ்வொரு விமானத்திலும் வருவோரின் விவரம் விமானம் அந்தந்த நாடுகளிலிருந்து புறப்படும் முன்பே அளிக்குமாறு விமானத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்களிடம் கோரப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும். பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். விமான நிலையத்தில் விரிவான பரிசோதனைக்கான ஏற்பாடு இருக்கும். மருத்துவ பரிசோதனைக்கான மருத்துவர்களும், ஊழி யர்களும் நியமனம் செய்யப்படுவார்கள். தங்குதடை யற்ற முறையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். காவல்துறைக்கு தேவையான பொறுப்பு அளிக்கப்பட் டுள்ளது. விமான நிலையங்களில் டிஐஜிக்கள் நியமிக்கப் படுவார்கள். நோய் அறிகுறி இல்லாதவர்கள் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அவர்களை விமான நிலையத்திலிருந்து காவல்துறையினரே வீடு களில் கொண்டு விடுவர். நேராக வீட்டுக்கு செல்வதை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு. 

வீடுகளில் கண்காணிப்பில் இருக்கும்போது அவர் களுக்கான மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும். இதில் தனியார் மருத்துவர்களின் சேவையும் பயன் படுத்தப்படும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அதற்கான வசதியும் ஏற்பாடுகளும் செய்யப்படும். டெலிமெடிசின் வசதி செய்யப்படும். நடமாடும் மருத்துவ பிரிவும் செயல்படும். சுகாதார ஊழியர்கள் முறையான கால இடைவெளியில் கண்காணிப்பில் உள்ளவர்களை வீடு களில் சந்திப்பார்கள். 

150 நாடுகளிலிருந்து  2.76 லட்சம் பேர்

வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வரு வோர் வீடுகளில் கண்காணிப்பில் இருக்கும்போது தமது உடல்நிலை குறித்து சுகாதாரத்துறையிடம் அன்றாடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கிடைக்க வில்லை என்றால் சுகாதாரத்துறையினர் அவர்களது வீடு களுக்கு நேரில் சென்று விவரம் சேகரிப்பார்கள். கண்கா ணிப்பில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வார்டு அள விலான குழு பொறுப்பு. வீடுகளில் இருக்க முடியாத வர்கள் அரசு மையங்களில் கண்காணிப்பில் இருக்கலாம்.

நோர்க்கா அளித்துள்ள இணைய தளத்தில் 150 நாடு களிலிருந்து 2.76 லட்சம் பேர் கேரளத்திற்கு திரும்பி வர பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விவரங்கள் சேகரிக்கும் பொறுப்பு நோர்க்காவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.