tamilnadu

img

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்  82 செமீமழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.இதுகுறித்து ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.