தமிழகம் முழுவதும் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பதாக வெளியிடப்பட்ட அரசாணையை ஒத்தி வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு விதிமுறைகளை கூறியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முதல் எடப்பாடி பழனிசாமி இந்த அரசாணையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், அக்டோபர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது. மேலும், மாணவர்களின் நலன் கருது பெற்றோர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர், மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.