tamilnadu

img

நவ. 22ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்....

சென்னை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங் கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஏப்ரல் மாதத்துடன் விஷால் அணியினரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தனி அதிகாரியின் கண்காணிப் பில் தேர்தலை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.மேலும், புதிய நிர்வாகிகளுக்கான தேர் தல் கடந்த ஜுன் 21ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தனி அதிகாரியின் மூலம் தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்.30 ஆம் தேதிக்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என தேர்தலை நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தேர்தல் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.