தோழர் மீயன்னா என்று அழைக் கப்படும் வே.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இன்று நம்மோடு இல்லையென்றாலும் அவரின் தியாகம் நிறைந்த வாழ்வும், வீரம் செறிந்த போ ராட்டமும் இளைஞர்களை பக்குவப்படுத்த வும், அநீதிக்கெதிராய் போராடவும் தூண்டு கிறது. 1950 காலகட்டங்களில் சாணிப்பால் சவுக்கடி தண்டனைகளும், தொழிலாளர்க ளுக்கு குறைவான கூலியும், சாகுபடி யாளர்களுக்கு குத்தகை வசூல் அதிகரிப்பும் மிக மோசமாக இருந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பண்ணை அடிமைகளாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் அடக்கி, ஒடுக்கி ஆட்சியாளர்களின் உதவியோடு நிலப்பிர புக்கள் சுரண்டிக் கொண்டிருந்தனர். நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில் பெரும் ராஜ்ஜியமே நடத்தி கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் 1951-ல் மீயன்னா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். 1952-ல் கீழையூர் கட்சிக் கிளையின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சாதீய தீண்டாமைக் கொடுமைக்கெதிராக பல போராட்டங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் சட்டசபை பொது தேர்தல் என அனைத்திலும் முதல்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினார். 1953-ல் வேட்டைக்காரனிருப்பு அவரு டைய தாத்தா கோவிந்தசாமி வீட்டில் தோழர் மீயன்னாவுக்கும், காசியம்மா ளுக்கும் எளிய முறையில் திருமணம் நடை பெற்றது. நாகை சிவராஜ் எம்.எல்.ஏ தலைமை ஏற்றார். எஸ்.வடிவேல் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையின் போது மீயன்னாவின் உறவினர்கள் சிலர் ஒரு தாழ்த்தப்பட்டவர் எப்படி நம்முடைய திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்குவது என்று ஒரு சலசலப்பை ஏற்படுத்தினர். அதற்கு மீயன்னா மணமேடையிலிருந்து இறங்கி வந்து வடிவேல் எங்களின் தலை வர் நீங்கள் வேண்டுமானால் வெளியே போங்கள் என்று உறவி னர்களை பார்த்து கோபமாக பேசி னார். பிறகு சலசலப்பு அடங்கி திரு மணம் நல்ல முறையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 1954-ல் தரிசு நில போராட்டம், இறவை பாசனப் போராட்டம், சிரமதான பணிகள் மூலம் சாலை அமைத்தல் என பல்வேறு போராட்டங்களும், மக்கள் சேவையும் தொடர்ந்தது. 1958-ல் நாகை தாலுகா குழுவிற்கு மீயன்னா தேர்வு செய்யப்பட்டு பிறகு விவசாய சங்க மாவட்ட குழுவிற்கும் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்பு 1964-ஆம் ஆண்டு கட்சி பிரியும் போது தோழர் மீனாட்சிசுந்தரம் கொள்கைப் புரித லோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்தார். 1968-ஆம் ஆண்டு நாகை தாலுகா மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து தோழர் மீயன்னா கட்சிப் பணியினை நாகை கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருந்து கிராமம் கிராமமாக சுற்றி திரிந்து பணி யாற்றினார். 1966-ல் கூலிப் போராட்டத்தை தொ டர்ந்து கூலிக்கான ஒப்பந்தம் நடைபெற்ற போது தோழர் மீயன்னா கைது செய்யப் பட்டார். அதையொட்டி தோழர் வி.பி.சிந்தன், கே.ஆர்.ஞானசம்பந்தம், மீயன்னா ஆகியோர் முதல்வர் அண்ணாவையும், அப்போது அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, சாதிக்பாட்சா ஆகியோரை யும் சந்தித்து 5படி நெல் கூலி கேட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். 4½ படிதான் என்று ஒப்பந்தம் பேசியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 1967-ல் பூந்தா ழங்குடி பக்கிரி துப்பாக்கிசூடு, கேக்கரை ஏஜி.ராமச்சந்திரன் படுகொலை, இரிஞ்சியூர் சின்னப்பிள்ளை படு கொலை, வைப்பூர்கலவரம், சிக்கல் பக்கிரிசாமி படுகொலை என இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் தலைமையிலான அட்டுழியங்கள் தொடர்ந்தன. கூலிக்காக போராடிய விவசாயத் தொழிலாளிகளையும், அப்பாவி மக்களையும், கட்சியின் துடிப்புமிக்க தலைவர்களையும் நிலப்பிரபுத்துவ ரவுடிக் கும்பல் காவல் துறை துணையோடு தடியடி நடத்தியது. 1968-ஆம் ஆண்டு விடங்கலூர் கிராமத்தில் நடந்த கூலி போராட்டத்தில் காவல்துறை யின் தாக்குதல் அதிகரித்தது. விவசாயத் தொழிலாளர்களின் வீடுகள் சூறையாடப் பட்டன. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அடித்து நொறுக்கப்பட்டனர். இதில் தோழர் மீயன்னா கடுமையாக தாக்கப்பட்டார். கலவரம் பற்றி அறிந்த கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பி.ராமமூர்த்தி சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் வந்து பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறி விட்டு காவல்துறையை கடுமையாக எச்சரித்தார். மேலும் கீழையூர், வலிவலம், இருக்கை ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து கலவரம் மூண்டது. மீண்டும் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் தீக்கரை யாக்கப்பட்டன. நில பிரபுக்களின் கொலை வெறித் தாண்டவம் தலைவிரித்தாடியது. இதற்கு முடிவு கட்டிட வேண்டும் என்ற நோக்கத்தில் தோழர் மீயன்னா கட்சியின் சார்பில் முதல்வர் அண்ணாதுரைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் நாகை தாலுகாவில் நிலப் பிரபுக்களின் அட்டுழியங்களும், கொடுமை களும் தாங்க முடியவில்லை. சாதாரண மக்கள் தாக்கப்படுகின்றனர். அப்பாவி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என 1968 டிசம்பர் 5ஆம் தேதி அந்த கடிதம் அனுப்பப்பட்டது. இது தீக்கதிரில் 15.12.1968 முழுமையாக பிரசு ரிக்கப்பட்டது. அந்த கடிதத்திற்கு பிறகும் அன்றைய திமுக அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான் 1968 டிசம்பர் 25 அன்று இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணனின் தலைமையில் குண்டர் படை கீழ வெண் மணியில் ராமய்யாவின் குடிசைக்குள் வைத்து குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உள்பட 44 உயிர்களை தீயிட்டு எரித்து கரிக் கட்டைகளாக்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு 1968 டிசம்பர் 26, 27, 28-ல் கலந்து கொள்ள கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்த தோழர் மீயன்னா சம்பவம் அறிந்து தோழர் பி.ராமமூர்த்தி, கே.ஆர். ஞானசம்பந்தம் உள்ளிட்டோருடன் வெண்மணிக்கு வந்தார். திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு முன்பு தோழர் மீயன்னா, “உயிரை கொடுத்து பாது காத்தோமே! உயிரை எடுத்து விட்டார்களே பாவிகள்” என்று கதறி அழுதார். அதற்கு பிறகும் வெண்மணி வழக்கு, டிராக்டர் மறியல் போராட்டம், சுருட்டு தொழிலா ளர் போராட்டம் என மீயன்னாவின் போரா ட்டப் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தோழர் மீயன்னா அவர்கள் உழைப்பா ளிகளின் போர்ப்படைத் தளபதியாகவும், செங்கொடி இயக்கத்தின் தலைவராகவும், கீழவெண்மணி தியாகிகளின் கதாநாயக ராகவும் செயல்பட்டார். சிவப்புத் துண்டோ டும் சிரித்த முகத்தோடும் வாழ்ந்து இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி யாய் இருந்து மறைந்துள்ளார் அவரின் வாழ்வும் போராட்ட பாதையும் இன்றைய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக அமையட்டும்.