tamilnadu

வாலிபருக்கு ஆயுள்

கும்பகோணம், ஏப்.23- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கரிக்குளம்மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் செல்வம்(30). அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன்(42). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி செல்வத்துக்கும், கண்ணதாசனுக்கும் மீண்டும் இடையேதகராறு நடந்தது. இதில் கண்ணதாசன், செல்வத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் இந்த கொலை சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர். கொலை வழக்கின் விசாரணைகும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல்,கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

;