tamilnadu

img

பலத்த காற்றால் மகாராஷ்டிரத்தில் கரை ஒதுங்கிய குமரி மீனவர்கள்

 நாகர்கோவில்,அக்.25- அரபிக் கடலில் மீன்பிடிக்க சென்று பலத்தக் காற்றினால் கன்னியாகுமரியை சேர்ந்த சுமார் 1,500 மீனவர்கள் மகாராஷ்டிர மாநில கடற்கரையில் கரை ஒதுங்கினர். குமரி மாவட்ட  மீனவர்கள் உள்ளிட்டோர் 840 படகுகளில் அரபிக்  கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கடல்பகுதியில் வீசும் பலத்த காற்றில் சிக்கி, 800 படகுகள் குஜராத், கோவா, மகாராஷ்டிரம் மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ளன. அதில் 150 படகுகள், மகாராஷ்டிர மாநிலத்தின் தேவகாடம் துறைமுகத்தில் கரைஒதுங்கியுள்ளன. அதில் தலா 10 பேர் வீதம் 1500 மீனவர்கள் உள்ளனர். 40 படகுகளின் நிலை தெரிய வில்லை. இந்நிலையில் மகாராஷ் டிரத்தில் கரை ஒதுங்கியுள்ள மீன வர்கள்,  உதவி கேட்டு கன்னியா குமரியிலுள்ள தேவாலய பாதருக்கு ஆடியோ அனுப்பியுள்ளனர். இதனிடையே மீனவர்கள் கரை திரும்பாமல் பல்வேறு பகுதிகளில் ஒதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததும் குமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த மீனவர்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மீனவர்கள் குறித்த தகவலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.