இந்திய-சீன எல்லைத் தகராறு பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்தே நீடித்து வரும் பிரச்சனை என்பதை சீனா உலகிற்கு தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டே வந்துள்ளது. சீனா பலங்குன்றிய நாடாக இருந்த காலத்தில் கூட, பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் சீனத்தின் மீது திணித்த இடைக்கால ஏற்பாடான எல்லை வரையறைகளை ஏற்க மறுத்து வந்துள்ளதை சீன அரசியல்- வரலாற்று அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மக்மோகன் எல்லைக்கோடு
1914 இல் சிம்லாவில் பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், திபெத்துக்கும் இடையேயான எல்லையை வரையறுப்பதற் காக நடத்தப்பட்ட மாநாட்டில் திபெத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அன்று பல வீனமாக இருந்த சீனாவுக்கு நிர்ப்பந்தமளித்து பிரிட்டிஷ் இந்தி யாவுக்கு சாதகமாக எல்லையை நிர்ணயிப்பதும், திபெத்துக்கு கூடுதல் சுயாட்சியை கொடுக்க வைப்பதுமே மாநாட்டின் நோக்கமாகும். முதலில் சீனாவிடமிருந்து திபெத்தை பிரித்து விட்டு, அடுத்து சியாங் ஜாங்கை பிரித்து பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லையில் இருந்து சீனாவை அப்புறப்படுத்துவதே பிரிட்டி ஷாரின் திட்டமாக இருந்தது.
ஏனெனில், அன்று சீனா பலவீனமான நிலையில் இருந்தது. ஐரோப்பியர்களின் ஆணைப்படி ஆட்சி செய்து கொண்டிருந்த நாடாகவும் சீனா இருந்தது. இருப்பினும், சீன தூதுக் குழுவினர் பிரிட்டிஷாரின் சூழ்ச்சிகளுக்கு அடி பணிய மறுத்து விட்டனர். ஆனாலும் தனது நோக்கத்தில் உறுதி யாக இருந்த பிரிட்டிஷார் பொறுக்கி எடுக்கப்பட்ட திபெத் தூதுக் குழுவினருடன் எல்லை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் மக்மோகன் எல்லைக் கோடு என்று அறியப்படு கிறது. மக்மோகன், பிரிட்டிஷ் காலனித்துவ அரசில் பணி புரிந்த அதிகாரியாவார். தன்மீது திணிக்கப்பட்ட இடைக்கால எல்லை நிர்ண யிப்பை சீனா கடுமையாக மறுத்தது.மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சீனா சந்திக்க வேண்டியிருக்கும்;பேரழிவு ஏற்படும் என்று அன்றைய பிரிட்டிஷ் அயல்துறை செயலர் சீனாவை எச்சரித்தார்.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோவும் சரி-தேசியவாதி யான சியாங் கே ஷேக்கும் சரி- இருவருமே மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். திபெத் தனி நாடு கிடையாது. எனவே,எல்லை ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட அதற்கு உரிமை இல்லை என்று வாதிட்டனர். இந்திய விடுதலைக்கு பின்னர், சுதந்திர இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டது.இது சுதந்திர இந்தி யாவின் முதல் பத்தாண்டு காலம் நீடித்தது. எல்லையில் நில வும் இக்கட்டான நிலைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவை இணங்கச் செய்ய சீனா முயற்சித்தது. ஆனால் நேருவோ இந்தியாவில் இருந்து வெளியேறி விட்ட பிரிட்டிஷ் காலனித்துவ அரசு மூலமாக பெற்ற மக்மோகன் எல்லைக் கோட்டிலேயே உறுதியாக நின்றார்.
சூ யென் லாய் இந்திய வருகை
எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான இறு திக்கட்ட முயற்சியாக சூ யென் லாய் 1960 இல் இந்தியாவுக்கு வந்தார்.அக்சாய் சின் பகுதியின் மீதான சீனாவின் உரி மையை இந்தியா அங்கீகரித்தால், அருணாச்சலப் பிரதேசம் முதல் மக்மோகன் கோடு வரையிலான பகுதியில் இந்தியா வின் உரிமையை ஏற்றுக்கொள்ள சீன அரசு முன்வந்தது. நேரு இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். எல்லைப் பிரச்சனையில் நெகிழ்வுத் தன்மையற்ற வெளி யுறவு நிலைபாட்டை நேரு மேற்கொண்டார். இந்திய-சீன எல்லைத் தகராறு இன்றிருப்பது போல அன்று உணர்ச்சிகரமான பிரச்சனையாக மாற்றப்பட வில்லை. எல்லைப் பிரச்சனைக்கு சமரசத் தீர்வு காணக் கூடிய வகையில், நேரு அன்று இணையற்ற செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு நாடாளு மன்றத்தில் மிகப்பெரிய பெரும்பான்மை பலம் இருந்தது. இந்தியாவின் எல்லா மாநில சட்டமன்றங்களும் காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.
திபெத் விடுதலையை ஆதரித்த ஜனசங்கம்(பாஜகவின் மூதாதைக் கட்சி) மற்றும் ராம் மனோகர் லோகியாவால் வழி நடத்தப்பட்ட சிறிய அளவிலான குழுக்களும்தான் எல்லைப் பிரச்சனையில் நிரந்தர தீர்வுக்கு எதிராக இருந்தனர். அச்சமயம்,மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவின் வலதுசாரிகள் - சமூக ஜனநாயக அரசியல் கட்சிகள் மத்தியில் திபெத் விடுதலைப் பிரச்சனை மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது.தலாய் லாமா, சீன அரசுக்கு எதிராக கலகக் கொடி உயர்த்தினார்;1959 ஆம் ஆண்டில் இந்தியாவிடம் அடைக்கலம் கோரினார்; இந்தியாவும் அவருக்கு புகலிடம் அளித்தது. இது பெய்ஜிங்கை கோபப்படுத்தியது.மேற்கு நாடு களின் தாராளமான நிதியுதவியுடனும்,இந்திய அரசின் ஆதர வுடனும் வெளிநாட்டில் செயல்படும் திபெத் அரசு அமைக்கப் பட்டது.இந்தியா -சீனா இருதரப்புமே கடுமையான நிலை பாடுகள் மேற்கொண்டன.இருந்த போதிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது இந்தியாவுடன் உடன்பாடு காண்பதற்கு திபெத் பிரச்சனை ஒரு இடையூறாக குறுக்கிட அனுமதிக்கவில்லை
அமெரிக்க சிஐஏ உளவு அமைப்பு 1956 முதல், திபெத்தில் சீனாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டதை தலாய் லாமாவின் அண்ணன் கியாலோ தாண்டப் ஒப்புக் கொள்கி றார். இதில், இந்தியாவின் பங்கு குறித்து சீனா சந்தேகப் பட்டது.எனவே,எல்லைத் தாவாவுக்கு தீர்வு காண்பதில் சீனாவுக்கிருந்த முந்தைய ஆர்வம் குறைந்துபோய்விட்டது. 1962 இந்திய- சீனப் போருக்கு பின்னர்,தோண்டப் தலை மையில் சிஐஏ நிதி மற்றும் பயிற்சியுடன் சீனாவுக்கு எதிராக கொரில்லா தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு இந்திய அரசின் மறைமுக ஆதரவும் இருந்தது. எனினும் தோண்டப் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. திபெத்தின் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்பட்டு 1949 இல் இருந்த சுயாட்சி மண்டல நிலைக்கு திபெத் திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என சீனா கருதியது. இதுவே சீனா 1962 இல் இந்தியா மீது போர் தொடுத்ததற்கான முக்கிய காரணம்.
நேருவின் “முன்னேறுக” கொள்கை
நேருவின் “முன்னேறுக”( Forward Policy) கொள்கை யானது, சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பகுதிகளில் இந்திய ராணுவ கண்காணிப்பு நிலைகளை அமைப்பதற்கு இந்திய ராணுவத்திற்கு பச்சைக் கொடி காட்டியது. இந்தியா உரிமை கோரும் அனைத்து பகுதி களில் இருந்தும் சீன ராணுவத்தை வெளியேற்றுவதே இந்திய ராணுவத்தின் இலக்காக இருந்தது. இது தவறான கணிப்பாகி விட்டது.இது 1962 போர் மூள்வதற்கான காரணமாக இருந்தது. இந்திய- சீனப் போர் பற்றிய ஹெண்டர்சன் புரூக்ஸ் என்பவ ரின் அறிக்கை தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது.இந்த அறிக்கையில், நேருவின் “முன்னேறுக” கொள்கையை செயல்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் நிலை இல்லை என கூறப்பட்டுள்ளது. இரு பெரும் வலிமையான நாடு களுக்கு இடையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடாக (Buffer State) திபெத்தை மாற்றுவதாகவே நேருவின் ராணுவ சாகசக் கொள்கை இருந்ததாக சீன அரசியல் - ராணுவ நோக்கர்கள் கருதுகின்றனர். திபெத் விடுதலை என்பதற்கு நேரு ஆதரவாக இருந்தார் என்பது உண்மைதான். இருப்பினும், திபெத் விடுதலைக்கு அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்று 1951 ஆம் ஆண்டில் அமெரிக்க வேண்டுகோள் விடுத்த போது ,நேரு அதை உடனடியாக நிராகரித்தார்.1954 இல் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை இந்தியா அங்கீகரித்தது.எனினும், காலப்போக்கில் நேருவின் நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.சீனாவிடம் இருந்து திபெத்துக்கு கூடுதல் சுயாட்சி வழங்கக்கோரி தலாய் லாமா போராடுவதை இந்தியா ஊக்குவித்தது.
1959 இல் தலாய்லாமாவை பின்பற்றுபவர்கள் லாசாவில் நடத்திய கலகத்தில் நேருவின் அரசுக்கு பங்கிருந்தது என்று சீனா குற்றம்சாட்டியது. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. வில் உயர் பொறுப்புகளை வகித்த புரூஸ் ரீடல் என்பவர் “மறந்து போன நெருக்கடி: திபெத், சி.ஐ.ஏ., மற்றும் இந்திய- சீனப் போர்” என்ற நூலை (2017) எழுதியுள்ளார்.அதில், சிஐஏ திபெத்தில் சதி வேலைகளில் ஈடுபட்டதும், மற்ற காரணங்களுமே சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்க காரணமாயிற்று என கூறப்பட்டுள்ளது. சோசலிச நாடுகளை பலவீனப்படுத்துவதற்கான அமெ ரிக்காவின் “கெடுபிடி யுத்தத்தின்” ஒரு பகுதியே, அமெரிக்கா திபெத்தில் மேற்கொண்ட மறைமுக நடவடிக்கைகள் என்று தலாய்லாமா ஒப்புக் கொண்டார். 1957- 61 காலத்தில் திபெத் பிரிவினைவாதிகளை சி.ஐ.ஏ. மிகவும் தீவிரமாக ஆதரித்தது. இந்திய உளவு அமைப்புகளின் உதவியின்றி சிஐஏ இப்படி செயல்பட முடியாது என்று சீனா சந்தேகப்பட்டது.
இந்தியா-சீனாவுக்கு இடையிலான சமீபத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் 1962 போர் போன்ற தீவிரமான மோதலாக உருவாகும் அபாயம் உள்ளதாக புரூஸ் ரீடல் கூறி யுள்ளார்.இது, அமெரிக்கா சீனாவுடன் போர் நடத்தும் நிலைமையை ஏற்படுத்திவிடும் என்றும் புரூஸ் ரீடல் சுட்டிக் காட்டுகிறார். இந்திய- சீனப் போரின் போது நேரு அமெரிக்காவின் உதவியை நாடினார். முற்றுகையிடப்பட்ட இந்தியப் படைக ளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவும், பிரிட்டனும் விமா னங்களில் ஆயுதங்களை அனுப்பின என்று புரூஸ் ரீடல் எழுதியுள்ளார். ஆனாலும், இந்திய ராணுவத்தை தோல்வியி லிருந்து காப்பாற்றும் அளவுக்கு போதுமான ஆயுத உதவி வரப் பெறவில்லை. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணமாக இருந்து, சமீபத்தில் வெளி உலகத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடி நிர்வாகத்தின் ஆவணங்கள் வெளி யிடப்பட்டன. அதில், சீன நிலைகளை குண்டு வீசித் தகர்த்தெறி வதற்காக 350 போர் விமானங்களுடன் பத்தாயிரம் அமெ ரிக்க விமானப்படை வீரர்களையும் அனுப்புமாறு நேரு அமெ ரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தது தெரியவந்துள்ளது. ஆனால், கென்னடி முடிவெடுப்பதற்கு முன்பாகவே சீனா கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் இருந்து தனது படை களை திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஆனால்,அவர்கள் உரிமை கோரும் அக்சாய் சின் பகுதி யில் மட்டும் தனது படைகளை நிலைநிறுத்திக் கொண்டது.சீனத்துடன் இந்தியா போரிட்டுக் கொண்டிருந்த வேளையில், பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்றிக் கொள்ள திட்டமிட்ட தாகவும், இந்த முயற்சியை கென்னடி தடுத்து நிறுத்தியதா கவும் புரூஸ் ரீடல் கூறுகிறார். இந்திய- சீனப் போர் ஒரு மாதம் நடந்தது. நீண்ட தூரம் சீனா ஊடுருவி இருந்தது. தானாகவே, போர் நிறுத்த அறி விப்பை வெளியிட்டது. மக்மோகன் எல்லைக் கோடானது “எல்லைக் கட்டுப்பாட்டு கோடால்” அலுவலகப் பூர்வமாக அகற்றப்பட்டுவிட்டது.
1967 இல் நடைபெற்ற மோதல்
இந்தியா, சீனா இடையே 1967 இல் நாது லா மற்றும் சோ லா (Nathu La and Cho La) பகுதிகளில் மீண்டுமொரு பெரிய மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் 140 பேர் இறந்தனர். சீனத் தரப்பிலும் ஏராளமானோர் இறந்தனர்.இதற்குப் பின்னர் சமீபத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையான மோதலின் விளிம்பில் இரு தரப்பும் நின்றனர். ஆனால், நல் வாய்ப்பாக இரு தரப்பும் நிதானத்துடன் நடந்து கொண்டதால் பெரிய மோதல்கள் தவிர்க்கப்பட்டன.
1993 ஒப்பந்தம்
தவறான புரிதல்கள், எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்பட்டு விடக் கூடிய நேரடி மோதல்களைத் தவிர்ப்பதற்காக “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில்” அமைதியை பராமரிப்பதற்கான சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. எல்லையில் ஏற்படும் தகராறுகளுக்கு படைபலத்தை பிரயோ கிக்கக் கூடாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகிலும் படைபலத்தையும் குறைத்துக் கொண்டன. 1996,2005 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மேலும் கூடுதலாக எல்லை ஒப்பந்தங்கள் ஏற்பட்டது.இது இருதரப்பு நம்பிக்கையை பலப்படுத்தியது. ஆனாலும், எல்லைகள் தீர்க்கமாக வரையறுக்கப்படாத காரணத்தால், சிறு சிறு மோதல்களும் நடைபெற்றன. எனினும், கடந்த 35 ஆண்டுக ளாக துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை. இந்த நிலையில் தான் மோடியின் தீவிர தேசியவாத அரசின் வருகை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றநிலைச் சூழலை அதிகப்படுத்தி யது. இந்திய எல்லைப் பகுதியில் சாலைகள் அமைத்தல், அக்சாய் சின் அருகில் உள்ள லடாக் பகுதியில் விமான நிலைய மேம்பாட்டு பணிகள் போன்றவற்றால் சீனா எச்சரிக்கை அடைந்தது.
1996 இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனை நடத்தியதை நியாயப் படுத்தும் விதமாக சீனாவை முக்கிய எதிரியாக அடையாளப் படுத்தியதை சீனா ஒரு போதும் மறக்காது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், “எமது எல்லைகளில் 1962 இல் ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திய, வெளிப்படையான அணு ஆயுத சக்தி கொண்ட நாடு எமது அண்டை நாடாக உள்ளது.கடந்த சில பத்தாண்டுகளாக அந் நாட்டுடன் உறவு மேம்பட்டுள்ள போதிலும், இறுதி செய்யப்படாத எல்லைப் பிரச்சனையால் அவ நம்பிக்கை நிலவுகிறது” என்று அணுகுண்டு சோதனைக்கு அப்பட்டமாக சீனாவை காரணம் காட்டியிருந்தார். அடுத்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்து ஆண்டு கால ஆட்சியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பெரிய பிரச்சனைகள் ஏதுமில்லை. இருப்பினும், அந்தக் காலத்தில்தான் இந்திய- சீன எல்லையில் சாலைகள் அமைக் கும் திட்டம் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா- சீனா கருத்து வேறுபாடு கொண்டிருந்த 73 எல்லைச் சாலை கள் போடப்பட்டன.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்ட பின்னர், சீனா தொடர்பான அயலுறவு கொள்கையில் ஐ.மு.கூட்டணி அரசு (2) அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்க மாக சென்றது. சீனாவைக் கட்டுக்குள் வைப்பதற்கும், சீனாவை சுற்றி வளைப்பதற்காகவும் அமெரிக்கா ராணுவ சூழ்ச்சி வலையைப் பின்னியது ( Military Pivot) .அத் திட்டத்தில், இந்தியா விருப்ப மான பங்குதாரராகச் சேர்ந்தது.இந்தியா - சீன எல்லையில் உட்கட்டமைப்புகளை இந்தியா பலப்படுத்த வேண்டும்; ஆசிய- பசிபிக் மண்டலத்தில் தங்களுடன் இணைந்து செயல் படுவதற்கான கப்பல் படையையும் பலப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. டோக்லாம் மோதலுக்குப் பின்னர், மோடியின் அரசு சாலைப் பணிகளை விரைவுபடுத்தியது. காரகோரம் மற்றும் திபெத்- ஜிங் ஜியான் நெடுஞ்சாலை அருகில் உள்ள டார்பக் -சாயோக் - தௌலத் பேக் சாலையை இந்தியா அமைத்ததே கல்வான் மோதலுக்கான முக்கிய காரணமென்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மோடியின் பங்கு
மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்திய-சீன உற வுகள் மோசமடைய ஆரம்பித்தது.இதுவரை இல்லாதவாறு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டில் செயல்படும் திபெத் அரசுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில், காங்கிரஸ் கட்சி சீனாவுக்கு எதிராக வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறி விட்டதாக மோடி குற்றம் சாட்டினார். 2014 இல் ஜி ஜின்பிங் இந்திய வருகைக்கு பின்னர் உறவுகள் மீண்டும் சீரடைந்தன.
ஆனாலும், 2017 இல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த டோக்லாம் நிகழ்வு சீனாவுக்கு ஆச்சரியமேற்படுத்தியது.இந்தியா, பூடான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளை ஊடறுக்கும் பகுதியாகும் டோக்லாம்.பின்னர் இந்தியா, சீனா அந்தப் பகுதியில் இருந்து பின்வாங்கின. பூடான் முடியாட்சி சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தனிப்பட்ட முறையில் முயற்சிகளைத் துவக்கி உள்ளது.டோக்லாம் சம்பவத்திற்குப் பின்னர்,2018 இல் வூகா னில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் மோடியும், ஜி ஜின்பிங் கும் எல்லைப் பகுதிகளில் ஏற்படும் பதற்றநிலை மோசம டைந்து விடாமல் தங்களின் ராணுவங்களுக்கு வழிகாட்டு தலை வழங்க ஒப்புக் கொண்டனர். இரண்டு தலைவர்களும் மீண்டும் 2019 இல் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இரு நாடு களும் மண்டல மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டன.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டு நட்புக் களிப்பெல்லாம், உலகின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட ஆறு மாதங்க ளுக்குள்ளாக ஒன்றுமில்லாமல் மாயமாகி விட்டது. 2020 ஜூன் 15 கல்வான் நிகழ்வு இந்திய வீரர்களின் உயிரி ழப்பில் முடிந்துள்ளது.
இந்தியாவின் உணர்ச்சி வசப்பட்ட நிலை இன்னும் நீடிக்கிறது. எனினும், இரு நாடுகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றத்தை குறைப்பதற்கான தொடர் பேச்சு வார்த்தைகளை துவக்கி உள்ளன.இதைத் தொடர்ந்து சீன ராணுவம் சில பிரச்சனைக்குரிய முனைகளில் இருந்து வாபஸ் பெற்றுள்ளது. மோதலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் ஆளில்லா விமானங்களை இயக்குவதில்லை; பதற்றத்தை தவிர்க்கும் வகையில் ஒரு மாதம் இருதரப்புமே கால்நடை ரோந்துப் பணியை மேற்கொள்வதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் உயர்மட்ட படைத் தலைவர்கள் மட்டத்தில் இதுவரை நான்கு சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
சீனா கடந்த ஆண்டில் இருந்தது போன்ற முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா கோருகிறது. இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜுலை மூன்றாவது வாரத்தில் லடாக் சென்ற போது, உடன்பாடு ஏற்பட சிறிது காலமாகலாம் என்று தெரிவித்துள்ளார். இரு தரப்புமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் அடிப்படையில், எல்லைப் பிரச்சனைக்கு முழுமையான உடன்பாடு காண்பதே நீடித்த- நிலையான அமைதியைக் கொண்டு வரும் என்பது இருதரப்புக்கும் நன்கு தெரியும்.
ஃப்ரண்ட்லைன் ஆக.14,2020,
தமிழில்: ம.கதிரேசன்