tamilnadu

img

அரசு வங்கிகளும், தனியார் வங்கிகளும் - சி.பி.கிருஷ்ணன்

1969 ஜூலை 19ஆம் தேதி 14 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டு இன்றோடு 51 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசாங்கம் மிகவும் துரிதமாக ஈடுபட்டு வருகிறது. 2020 மேமாதம் 13ஆம் தேதிமுதல் 17ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் மத்திய நிதி அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேந்திரமல்லாத அனைத்து பொதுத்துறைகளிலுமிருந்தும் மத்திய அரசு முழுமையாக வெளியேறும் என்றும், கேந்திரமான துறைகளில் குறைந்தபட்சம் ஒருநிறுவனமும், அதிகபட்சமாக நான்கு நிறுவனங்கள் வரையும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். வங்கித்துறை கேந்திரமானதுறை என்று அறிவிக்கப்பட்டால், அதிகபட்சமாக நான்கு பொதுத்துறை வங்கிகள் மட்டுமேமிஞ்சும். மற்றவையெல்லாம் இந்த நான்குவங்கிகளுடன் இணைக்கப்படும் அல்லது தனியார்மயமாக்கப்படும் அல்லது ஹோல்டிங் கம்பெனிகளாக மாற்றப்படும். அரசு வங்கிகள் மற்றும் அரசு நிதிநிறுவனங்களுக்கும், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


     அரசு வங்கிகள் & 
    நிதி நிறுவனங்கள்    

     தனியார்  வங்கிகள் &

    நிதி நிறுவனங்கள்

மொத்தம் 12 வங்கிகள், 4 நிதிநிறுவனங்கள், வைப்பு பெறும்உரிமையுள்ள 8 வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் 22 தனியார் வங்கிகள், 3 பிரதேச தனியார்வங்கிகள், 10 சிறிய தனியார்வங்கிகள், 7 பேமெண்ட்வங்கிகள், 46 வெளிநாட்டுவங்கிகள், வைப்புபெறும் உரிமையுள்ள 80 வங்கியல்லாத நிதிநிறுவனங்கள்
அரசு வங்கிகளில் உள்ள மொத்தபங்குகளில் மத்திய அரசின்பங்கு 51%க்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதுசட்டம். எனவே மத்திய அரசின் முழுஉத்தரவாதம் உள்ளதால் திவாலாகாது 1947 முதல் 1969 வரை 559 தனியார் வங்கிகள் திவாலாகி மக்களின் வைப்புத்தொகை பெருமளவில் பறிபோனது, 1969க்கு பிறகு 23 தனியார் வங்கிகள் திவாலாகி அவை பெருமளவு நஷ்டத்துடன் அரசு வங்கிகளுடன் இணைக்கப் பட்டதன் காரணமாக வைப்புதாரர்களின் பணம் காப்பாற்றப் பட்டது. நஷ்டத்தை அரசு வங்கிகள் சுமந்தன. யெஸ்வங்கி திவாலாகும் நிலைக்கு சென்று, அரசு வங்கியான ஸ்டேட் வங்கியும், பொதுத்துறை ஆயுள்காப்பீட்டு நிறுவனமும் தற்காலிகமாக அவ்வங்கியை காப்பாற்றியுள்ளன. தனியார் வங்கிகள் திவாலாகும் ஆபத்தை கொண்டுள்ளன.
அரசு வங்கிகளில் போடப்படும் வைப்புதொகைக்கு முழுமையான பாதுகாப்பு உண்டு தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஒரு கணக்குதார ருக்கு 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டிஐசிஜிசி காப்பீட்டு பாதுகாப்பு உண்டு. தனியார்துறையை சார்ந்த வங்கி யல்லாத நிதிநிறுவனங்களில் போடப்படும் வைப்புத் தொகைக்கு எந்தப்பாதுகாப்பும் கிடையாது.
மொத்தகிளைகளில் 33% கிளைகள் கிராமப்புறங்களில் உள்ளன மொத்த கிளைகளில் 15% கிளைகள் மட்டுமே கிராமப்புறங்களில் உள்ளன
அரசு வங்கிகள் நாட்டின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்கு பெருமளவில் நிதிஆதாரம் வழங்குகின்றன தனியார் வங்கிகள் நாட்டின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்கு அநேகமாக நிதி வழங்குவதில்லை.
எந்தவித பிணையில்லாமல், சொத்து அடமானம் இல்லா மல் ரூ. 2 லட்சம் வரை குறுந்தொழில் கடன் வழங்கப்படுகிறது வழங்கப்படுவதில்லை
எந்தவித பிணையில்லாமல்,சொத்துஅடமானம் இல்லா மல் ்ரூ. 3லட்சம்வரை விவசாயக்கடன் வழங்கப்படுகிறது வழங்கப்படுவதில்லை
எந்தவித பிணையில்லாமல்,சொத்து அடமானம் இல்லா மல் ரூ. 4லட்சம் வரைகல்விக்கடன் வழங்கப்படுகிறது வழங்கப்படுவதில்லை
மொத்தகடனில் 40%  வரை ஏழை மக்களுக்கான முன்னுரி மைக்கடனாக வழங்கப்படுகிறது அப்படி ஒருவரையறை இல்லை. முன்னுரிமைக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
முன்னுரிமைக்கடனில் 18%  விவசாயக்கடனுக்காக உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது அப்படி ஒருவரையறை இல்லை
ஏழை மக்களுக்கான 39.71கோடி பிரதமமந்திரி ஜன்தன் கணக்குகளில் 31.51 கோடிகணக்குகள்(79.35% )அரசு வங்கிகளாலும், 6.94 கோடிகணக்குகள் (17.48%) கிராம வங்கிகளாலும் திறக்கப்பட்டிருக்கின்றன. ஏழை மக்களுக்கான 39.71கோடி பிரதம மந்திரி ஜன்தன் கணக்குகளில் 1.26 கோடிகணக்குகள் (3.17% )மட்டுமே தனியார் வங்கிகளால் திறக்கப்பட்டிருக்கின்றன.
ஊரடங்கு காலத்தில் ஜன்தன் கணக்குகள் மூலமாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 31000கோடியில், ரூ.30000 கோடி அரசு மற்றும் கிராமவங்கிகளால் வழங்கப்பட்டன. ஊரடங்கு காலத்தில் ஜன்தன் கணக்குகள் மூலமாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 31000கோடியில், தனியார் வங்கிகளால் ரூ.1000 கோடிமட்டுமே வழங்கப்பட்டன.
உயர்மட்ட ஊழலைகண்காணிக்க, தடுக்க, ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பலஅடுக்கு அமைப்புகள் உள்ளன. உயர்மட்ட ஊழல்கள் அதிக அளவு நடைபெறுகின்றன. உதாரணமாக யெஸ்வங்கி நிர்வாகத்தின் உயர்மட்ட ஊழலால் பொதுமக்களின் வைப்புத்தொகை ரூ.1,05,000 கோடி ஆபத்தில் உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் உயர்மட்ட ஊழல் காரணமாக பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதன் முன்னாள் நிர்வாக இயக்குநரின் சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஹவுசிங்டெவலப்மெண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தீவான்ஹவுசிங்பைனான்ஸ் லிமிடெட், இன்ப்ராஸ்ட்ரக்சர்லீஸிங்&பைனான்ஸ் சர்வீஸஸ் உள்ளிட்ட வங்கியல்லாத நிதிநிறுவனங்களின் உயர்மட்ட ஊழல் காரணமாக பல்லாயிரம் கோடிரூபாய் பொதுமக்களின் சேமிப்பு, வங்கிக்கடன் ஆகியவை ஆபத்துக்குள்ளாகியுள்ளன.
வங்கித்துறையின் மொத்த வியாபாரத்தில் அரசு வங்கி களின் பங்கு சுமார் 75% அளவிற்கு இருந்தாலும், மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 94% ஐ தன்னகத்தே கொண்டுள்ளன. வங்கித்துறையின் மொத்தவியாபாரத்தில் தனியார் வங்கி களின் பங்குசுமார் 25% அளவிற்கு இருந்தாலும், மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 6% ஐ மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளன
அரசு வங்கிகளில் அதிகபட்சமாக வசூலிக்கப்படும் வட்டி 12.5% ஆகும். தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக வசூலிக்கப்படும் வட்டி 26%  ஆகும்
அரசு வங்கிகள் வெளிப்படைத்தன்மை படைத்தவை. இவை தகவல் அறியும் உரிமைசட்டத்திற்கு உட்பட்டவை. அரசு வங்கிகளின் மீது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். தனியார் வங்கிகள் வெளிப்படைத்தன்மை இல்லாதவை. தகவல் அறியும் உரிமைசட்டத்திற்கு உட்படாதவை. தனி யார்வங்கிகள் மீது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.
அரசு வங்கிகளின் இயக்குநர் குழுவில் மத்தியஅரசின் சார்பாகவும், ரிசர்வ் வங்கியின் சார்பாகவும், ஊழியர்கள் சார்பாகவும், அதிகாரிகள் சார்பாகவும் இயக்குநர்கள் நிய மிக்கப்படுவார்கள். (2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழியர்கள் சார்பாகவும், அதிகாரிகள் சார்பாகவும் இயக்கு நர்கள் நியமிக்கப்படுவதில்லை) தனியார் வங்கிகள் சிலவற்றில் நிலைமையைப் பொறுத்து ரிசர்வ்வங்கியின் இயக்குநர் நியமிக்கப்படு வார். அரசு சார்பாகவோ, ஊழியர்கள் சார்பாகவோ, அதிகாரிகள் சார்பாகவோ இயக்குநர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்.
அரசு வங்கிகளின் உயர் அதிகாரிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள்     தனியார் வங்கிகளின் உயர்அதிகாரிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்புக்கு உட்படாதவர்கள்
மிகக்குறைவான சேவை மற்றும் அபராதக்கட்டணமே வசூ லிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு பிறகு அது கூடுதலாகி உள்ளது. (இதை அற வேகை விட வேண்டும் என்று வங்கிஊழியர் இயக்கம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் நடத்தி வருகின்றன) மிக அதிகமான சேவை மற்றும் அபராதக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாங்கிய கடனை முன்கூட்டியே முழுவதுமாக செலுத்தினால் கூட அபராதக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கான நிரந்தர வேலைவாய்ப்புகள் உள்ளன நிரந்தர வேலைத்தன்மையே அநேகமாக கிடையாது
அரசு வங்கிப் பணியாளர்கள் நியமனத்தில் தலித், ஆதி
வாசி, பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவவீரர், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுகிறது
தனியார் வங்கிப்பணியாளர்கள் நியமனத்தில் இட
ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை
வங்கியின் நிர்வாக இயக்குநருக்கான பதவிக்காலம் அதிகபட்சமாக மூன்றுவருடம் வங்கியின் நிர்வாக இயக்குநருக்கான பதவிகாலத்திற்கு உச்சவரம்பு கிடையாது
நமதுநாட்டு வங்கித்துறையில் அரசு வங்கிகள் தலைமை
பாத்திரம் வகிப்பதன் காரணமாகத்தான் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதிநெருக்கடியின் போது நமது நாட்டு பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளில் வங்கித்துறை பெரு
மளவு தனியார்வங்கிகளின் ஆதிக்கத்தில் இருப்பதன் காரணமாக 2008ஆம்ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி
நெருக்கடியில் அந்நாடுகளின் பொருளாதாரம் பெரும் சீரழிவை சந்தித்தது.

மக்களின் வாழ்வு மேம்பட அரசு வங்கிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை முறியடித்து, அரசு வங்கிகளை பாதுகாக்க,வங்கி ஊழியர் இயக்கமும், ஒட்டு மொத்த தொழிற்சங்க இயக்கமும், பொதுமக்களும் இணைந்து போராட முன்வர வேண்டும்.