tamilnadu

img

சென்னை கோயம்பேட்டில் பயங்கர தீ விபத்து!

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான காலி மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலையே அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான காலி மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏக்கர் கணக்கில் உள்ள அந்த பகுதியில் காய்ந்த மரங்கள் மற்றும் செடிகள் அதிகமாக காணப்பட்டதால் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 

தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

தீ விபத்தின் காரணமாக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. புகை மூட்டத்தின் காரணமாக சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து காரணமாக மெட்ரோ ரயிலை பாதுகாப்பாக இயக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.     


;