புதுதில்லி, மே 14-எல்டிடிஇ அமைப்பின் மீதானதடையை மேலும் 5 ஆண்டு காலத்துக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், “தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) அமைப்பானது வலு வான இந்திய எதிர்ப்பை காட்டி வந்தது. இந்திய தேசி யத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாகவும் இருந்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்படலாம். எனவே அவர்களுக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.