பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
சண்டிகர்,நவ.9- இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக் கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சீக் ரெபரண்டம் எனும் மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பஞ்சாப்பை தனி நாடாக்க வேண்டும் எனவும், இது தொடர்பான பொது வாக்கெ டுப்பு 2020ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும் எனவும் காலிஸ்தான் பிரிவினை வாதிகள் கூறிவருகின்றனர். இந்நிலையில், பொது வாக்கெடுப்பை ஊக்குவிக்கும் விதமாக “2020 சீக் ரெபரண்டம்” (2020 Sikh Referendum) எனும் பெயரில் செயலி ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இந்த செயலியானது சீக்கிய மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்ன ணியில் ஐஎஸ்ஐ உள்ளதாகவும் இந்த செயலியை உடனடியாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலி யுறுத்தியுள்ளார்.