tamilnadu

img

அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை
அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கரூரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், திருச்சி, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் வெள்ளியன்று 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகவும் வாய்ப்பு உள்ளது.

;