tamilnadu

img

தாய்மொழியை நேசிப்போருக்கு எதிரான போர்ப் பிரகடனம்

கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் எதிர்ப்பு வலுவடைந்த போதிலும் ‘இந்தி நிகழ்ச்சி நிரலில்’ இருந்து பின்வாங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வராதது மொழியின் பெயரால் சங்பரிவார் புதிய மோதலுக்கான வாசல் திறக்கும் அறிகுறி என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். நாட்டை ஒன்றிணைக்கும் வல்லமை இந்திக்கு மட்டுமே உள்ளது என்கிற கருத்து உண்மைக்குப் புறம்பானது. இது தாய் மொழியை நேசிப்போருக்கு எதிரான போர்ப் பிரகடனம். நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இத்தகைய முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டார். முகநூல் பக்கத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: இந்தி தேசிய மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. மொழியின் பெயரால் நாட்டில் குறிப்பிடத்தக்க விவாதம் ஒன்றும் எழவில்லை. இந்தி பேசாததால் இந்திய குடிமகன் இல்லை என எவரும் எண்ண வேண்டியதில்லை. தென் இந்தியா விலும் வடகிழக்கு மாநிலங்களிலும் வாழும் மக்கள் இந்தி பேசுவோர் அல்ல. அங்கெல்லாம் முக்கிய மொழியாக இந்தியை மாற்ற வேண்டும் என்பது அந்த மக்களின் தாய்மொழியை புறக்கணிப்பதாகும். பெற்ற தாயைப்போல் தாய் மொழியை நேசிக்கும் மனிதர்களின் இதயத்தை தகர்க்கும் போர் பிரகடனமாகும் இது. பல்வேறு மொழிகளை அங்கீகரிக்கும் அர சியல் வடிவமே இந்தியாவுடையது. அதற்கு இழுக்கு ஏற்படுத்தும் அணுகுமுறையிலிருந்து சங்பரிவார் மாற வேண்டும். நாடும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே இத்தகைய கருத்துகள் முன்வைக்கப் படுவது மக்களுக்கு தெரியும் என்பதை சங்பரிவார் புரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.