பிலிப்பைன்ஸ் நாட்டில் கோனி புயல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்சில் நேற்று அதிகாலையில் கோனு சூறாவளிப்புயல் தாக்கியது. புயல் கரைகடந்த போது மணிக்கு 225 கி.மீ வேகத்தில் பெருங்காற்று வீசியது. கோட்டண்டுவானஸ் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த சூறாவளி புயலால் அதன் அருகே இருந்த அல்பே மாகாணத்தில் பலத்த காற்றுடன் கனழை பொழிந்தது. இதனால் வீடுகளில் கூரைகள் காற்றில் பறந்தன. சுமார் 13 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.