tamilnadu

img

பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...

சென்னை:
வடக்கு சத்தீஸ்கர், அதை ஒட்டிய நிலப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் காற்றின்  திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங் களில் ஓரிரு இடங்களில்  கன மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், குமரிக் கடல், உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.