tamilnadu

img

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சேலம், தருமபுரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், வடக்கு வங்கக் கடல், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத் திற்கு காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்என அறிவுறுத்தப்பட்டுள்ளது.