tamilnadu

img

மேலும் இரு நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை;
தென்மேற்கு பருவமழை ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென் னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை புதுக்கோட்டை மாவட் டங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

;